நான் வளர்ந்த காலங்களில் ஹிந்தி ஒரு தீண்டத்தகாத மொழி. எனக்கு ஒரு இருபது வயது இருக்கும் போதுதான் டிவியில் ஹிந்தி பாட்டுக்களையே பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த ஹிந்தி சினிமா பார்த்தும் சினிமா பாட்டுக் கேட்டும் தட்டு தடுமாறி கற்றுக்கொண்டதுதான். ஒரு கட்டத்தில் தப்பு தப்பாக, ஆனால் சரளமாக, எந்த தயக்கமும் இல்லாமல் பேச ஆரம்பித்தேன். என் நண்பர்கள் சொல்லியபடி நான் பேசிய தவறு இல்லாத முதல் ஹிந்தி வாக்கியம் எது என்று தெரிந்து கொள்ள கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
“வோ மா பன்னேவாலி ஹை”
ஹிந்தி இன்னும் கொஞ்சமும் தெரியாதவர்களுக்காக: எல்லா படங்களிலும் வெள்ளை கோட்டும் ஸ்டேதாஸ்கோப்பும் உள்ள டாக்டரோ, இல்லை வயதான ஒரு பாட்டியோ தவறாமல் ”தடடடன்ன்ங்க்” பின்னணி இசையுடன் சொல்லும் ஒரு வசனம் – “அவள் தாயாகப் போகிறாள்”
இன்றைய ஹிந்தி, தமிழ் படங்கள் எல்லாவற்றிலும் இடம் பெறும் ஸ்டாண்டர்ட் வசனங்கள் என்ன? தமிழே தெரியாத ஒருவர் அடிக்கடி தமிழ் படங்கள் பார்த்து பிக்கப் செய்யக்கூடும் வாக்கியங்கள் என்னென்ன? நீங்கள் நினைப்பதை எழுதுங்களேன்!
செப்டம்பர் 4, 2008 at 7:59 பிற்பகல்
“வண்டியை எடுறா!” எனக்கு ஏனோ தமிழ் திரைபடங்களில் இந்த வசனம் பிடிக்கவில்லை. “. காட்டுமிராண்டிதனமாக இருப்பதாக ஒரு உணர்வு. ஆனால் தவறாமல் உபயோகப்படுத்துக்கிறார்கள். Cliched? தமிழ் தெரியாதவர்கள் இந்த வார்த்தையை பிக்க்ப் செய்யும் அள்விற்க்கு.
எழுதாளர் சுஜாதவிடம் ஒரு பட்டியல் உண்டாம். அந்த பட்டியலில் அடங்கிய வார்த்தைகள் தனது கதைகளில் வராமல் பார்துக் கொள்வாராம். உதாரணத்திற்க்கு “விதி சிரித்தது”. அவருக்கு பிடிக்காத ஒன்று அது. அவர் இதை உபயோகப்படுத்தும் பிற எழுத்தாளர்களை வெளிப்ப்படையகவே mock செய்ததுண்டு. ஒரு நாவலில் அவர் எழுதியது இது: “ஜெயகாந்தனின் விதி அலமாரி மேல் தட்டில் உட்கார்ந்துக் கொண்டு அவளைப் பார்த்து கொல்லென்று சிரித்தது.
செப்டம்பர் 5, 2008 at 8:08 மு.பகல்
Phrase ellam kidaiyadhu – There is a single-word that dominates tamil cinema of today: “avanai potturungada”
செப்டம்பர் 16, 2008 at 10:03 பிற்பகல்
How can we ever forget Vivek saying “Escape!”
செப்டம்பர் 16, 2008 at 10:04 பிற்பகல்
Another common phrase/word used in Hindi movies is “bhachAO!”. SVSekar used to make fun of this in his dramas/teleserials!
செப்டம்பர் 17, 2008 at 5:20 பிற்பகல்
”டென்ஷன்” – இந்த வார்ததை தமிழா, ஆங்கிலமா என்ற சந்தேகம் ஏற்ப்படும் அளவிற்க்கு உபயோகப்படுத்துகிறார்கள். இதில் முக்கியம் எனன்வென்றால் திரைபடஙகளில் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் உபயோகப்படுத்துகிறார்கள். ஜனகராஜ் தமிழகத்ததிற்க்கு கொடுத்த gift இது.
செப்டம்பர் 17, 2008 at 7:56 பிற்பகல்
Plum/Das/Bags,
மறுமொழிகளுக்கு நன்றி!
நீங்கள் சொல்லி இருக்கும் எல்லாம் அடிக்கடி கேட்கிறோம்தான், ஆனாலும் அவற்றில் எதோ குறைவது போல ஒரு ஃபீலிங். கொஞ்சம் பழைய மாடல்கள்தான் எனக்கு பிடிக்கிறது. உதாரணமாக:
நான் என் கடமையைத்தானே செஞ்சேன்
இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்
நீ என் சகோதரி!
இப்போதெல்லாம் இந்த மாதிரி எதுவும் வருவதில்லையோ?
செப்டம்பர் 17, 2008 at 9:02 பிற்பகல்
One that is used by “kodumai” gOpAlakrishnan (V.Gopalakrishnan) – “nAn namma depArtmenttukku perumai thEdith thara pOREn!” (as a police official). Wonder why he was the natural choice for those kind of roles?