ஏற்கனவே வந்த படங்களுக்கு யாராவது விமரிசனம் எழுதுகிறீர்களா? சந்திரலேகாவுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், அதைத் தவிர வேறு எதற்காவது? எனக்கு ஞாபகம் இருக்கும் முன்னால் வந்த படங்கள்.
எதிர்நீச்சல்
பூவா தலையா
தவப் புதல்வன்
அன்புக் கரங்கள்
பராசக்தி
நவராத்திரி
உத்தம புத்திரன்
கல்யாணப் பரிசு
தேனிலவு
காதலிக்க நேரமில்லை
சூரியகாந்தி
தாழம்பூ
ஆசை முகம் (நிச்சயமாக இந்த ப்ரோக்ராமில் வந்ததா என்று தெரியவில்லை)
எங்க வீட்டுப் பிள்ளை
எங்கள் தங்கம்
பணக்காரக் குடும்பம்
ஹலோ பார்ட்னர்
)
வேறு ஏதாவது படம் நினைவு வந்தாலும் எழுதுங்கள்! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் எழுதிவிடலாம்…
செப்டம்பர் 5, 2008 at 11:27 பிற்பகல்
நான் அப்பொழுது ஒரு டவுன்ஷிப்பில் (Tamilnadu Cements) எனது தாய் தந்தையருடன் வசித்து வந்த காலம். நிறைய நண்பர்கள். வாரம் ஒருமுறை 16MM ப்ரொஜெக்டரில் திரைப்படம் காலனி வாசிகளுக்கு திரையிடப்படும்.நண்பர்கள் (well off officer’s offsprings) எல்லோரும் சேர்ந்து திரைப்படம் பார்ப்போம். மறுநாள் அலசுவோம். ஒருமுறை “யாருக்காக அழுதான்?” என ஒரு திரைப்படம் பார்த்தேன். நாகேஷ் கதாநாயகன். அந்தப்பருவததில் கதையும் புரியவில்லை. வசனங்களும் புரியவில்லை. என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்றும் புரியயவில்லை. மறுநாள் சில நண்பர்கள் “நான் பார்ததிலேயே Best movie” என்று சொன்னார்கள். அப்படி சொல்லாதவர்களெல்லாம் கேவலமாகப் பார்க்கப்பட்டார்கள். நான் கேவலமாகப் பார்த்தவர்கள் groupபா, அல்லது கேவலமாகப் பார்க்கப்பட்டவர்கள் groupபா என்று ஊகித்திருப்பீர்கள்!
யாரவது இதை பார்த்ததுண்டா? இந்த திரைபடத்தை பார்தது அழுததுண்டா? வியந்ததுண்டா? இல்லை atleast என்ன இழவையடா சொல்றாங்க என்று கடுப்புடன் சிம்னி கொழுத்த வெளியே போனதுண்டா?
செப்டம்பர் 7, 2008 at 12:53 மு.பகல்
I have heard of this movie, but haven’t seen it…