இன்னும் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு முடியவில்லை
December 2008
December 31, 2008
December 30, 2008
இன்னும் கிளறப்படும் கூட்டாஞ்சோறு
December 24, 2008
இன்னும் ஒரு கூட்டாஞ்சோறு போஸ்ட்
December 23, 2008
இத்தனை நாள் நான் கலக்குவதாக் பாராட்டியதால் அதற்கு நன்றியாக இது: RV, கூட்டாஞ்சோறு ப்ளாக்கில் கலக்கிக்கொண்டிருக்கிறான்.
ஜாதியை பற்றி பலர் பல குட்டைகள், ஏரிகள், குளங்கள், கடல்கள் எல்லாம் கலக்கிய பின்னரும் அது அடங்கிய பாடு இல்லை. அடங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இப்படி கலங்கிய ”நீர் நிலைகளில்” நானும் குதித்து என்னை சகதியாக்குவதை காலவரையின்றி தள்ளிப்போடுகிறேன்.
நான் சொல்ல வந்த விஷயம் வேறு. எனது போஸ்ட்கள் இரண்டு வாரங்களாக கொஞசம் சோர்வடைந்து விட்டது. ஏதாவது ஒன்றின் மேல் பழி போடலாம் என்றால் இது வரை ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் சோம்பல் மேல் பழி போடுகிறேன். (உண்மையான காரணமான நேரமின்மையை யாரும் ஒத்துக்கொள்ள போவதில்லை என்பதால் இப்படி). இன்னும் ஒரு வாரம் ஓய்விற்க்கு பிறகு எழுதுகிறேன்.
MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR.
December 23, 2008
பெரியார் பற்றி கூட்டாஞ்சோறு போஸ்ட்!
December 22, 2008
இன்று கூட்டாஞ்சோறு போஸ்ட்!
December 12, 2008
வெங்கையாவா வேங்கையாவா! – திரையுலக வரலாறு 5
Posted by Bags under Films, History of Tamil Films, Indian films, Misc, Tamil movies, Tamil reading | குறிச்சொற்கள்: Baker's motion pictures, Bhisma vadham, Cecil b demille, D.w. griffiths, Draupathi bhagya, Gaiety theater, Gajendra moksham, Hollywood, Keechaka vadham, Laila, London, Mahatma kabirdas, Nandhanaar, Nataraja Mudaliyaar, Ragupathi prakash, Ragupathi vengiah, Samikkannu vincent, Samudhra madhanam, Surya, Usha swapna, Vijay |[6] Comments
அந்த காலத்து திரைப்படம் என்றால் அந்த காலத்து விஜய் அல்லது அந்த காலத்து சூர்யா வந்து உலகமே எதிர்க்கும் காதலர்களை, தன் வாதத் திறமையால் அந்த உலகம் ஸ்த்ம்பிக்கும் ”லா பாயிண்டுகள” எடுத்து விட்டு ஒரு வழியாக கத்திகளும், ரிவால்வர்களும் சோகமாகிப்போய் வன்முறை அப்பாக்கள் கையிலிருந்த நழுவ, சேர்த்து வைத்து, காதலர்களை ரயிலில் ஏற்றி விட்டு, தன் காதல் மட்டும் சக்ஸஸ் ஆகாமல் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகளுடன் சோகமாக ரயிலை பார்த்து ஆரம்பித்த டாட்டா சினிமா பார்க்க வந்த ரசிகர்களில் வந்து முடியும் டைரக்டோரியல் டச்சுடன் “இவரது காதல் அர்ப்பணம் தொடரும்” என்று திரையின் ஒரு பாதியை ஆக்ரமிக்கும் வாசகங்களுடன் வீட்டிற்க்கு போய் சேரும் வரை விக்கி விக்கி அழுவதற்க்கு கணிசமாக சோகத்தை பேக் செய்து கொடுக்கும் ஒரு ஃபுல் சர்வீஸ் “எண்டர்டெயின்மெண்ட்” பேக்கேஜ் இல்லை. மாறாக ஐரோப்பியர் ஒருவர் விக்டோரியா பப்ளிக் ஹாலில் கதை கத்தரிக்காய் ஒன்றும் இல்லாத ”ஓடும் குதிரைகள்” அல்லது “தவழும் பாப்பாக்கள்” அல்லது காமிராவை ஆஃப் செய்ய மறந்த பொழுது அனாவசியத்துக்கு வந்து விழுந்த மண் தரைகள், கால்கள போன்ற காட்சிகள் தான் அன்றைய தமிழ் ரசிகர்களை வசீகரித்தவைகள். இந்தப் பேரானந்தக் கொடுமையைப் பார்க்க தமிழர்கள் கலங்காமல் காசை அள்ளிக் கொடுத்தார்கள். ஐரோப்பியர் கலங்காமல் காசை அள்ளினார். இன்று ஹாண்டிகாமில் ”நல்லா விழவில்லை, அழித்துவிடுங்கள்” என்று கோபமாக மணைவி கட்டளையிடும் காட்சிகளின் தரத்தை சேர்ந்தவையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.
சாமிகண்ணு வின்செண்டும் மக்களை எண்டர்டெய்ன் பண்ணியவர்களில் ஒருவர். 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இப்படி ஒன்றும் இல்லாததெற்கெல்லாம் பரவசப்பட்டு சினிமா பார்த்து வந்த் நிலமையில் இருந்த ரசிகர்களுக்கு முன்னேற்றமாக கதையுடன் கூடிய பரவசங்களை கொடுத்தவர்கள் தான் நடராஜ முதலியார், ஆர். வெஙகையா, ஆர். பிரகாஷ், மற்றும் பலர். இரண்டாவது பத்தாண்டில் தான் ஓரளவு சினிமா டேக் ஆஃப் பண்ணியது எனலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் முப்பதுகளில் தான் சினிமா டாப் கியாருக்கு மாறியது. நாம் முன்னரே நடராஜ முதலியார் பற்றி மாவு அறைத்து விட்டோம்.

R. Vengaiah
ரகுபதி வெங்கையாவும், ரகுபதி பிரகாஷ்ஷும் சக்கை போடு போட்ட தந்தையும் மகனும். 1914ல் கெய்ட்டி தியேட்டரை தொடங்கிய வெங்கையா மகனுடன் சேர்ந்து “கிழக்கின் நட்சத்திரம்” (Star of the East) என ஒரு ஸ்டுடியோவை நிறுவினார். வெங்கையா இந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களை வெளியிட்டார். நடராஜ முதலியாருக்கு கீச்சகவதம் என்றால் வெங்கையாவுக்கு பீஷ்மவதம். இதோ பட்டியல்:
பீஷ்மவதம் (1922)
நந்தனார் (1924)
சமுத்ர மதனம் (1923)
கஜேந்தர மோக்ஷம் (1924)
உஷா ஸ்வப்னா (1924)
திரௌபதி பாக்யா (1924)
மஹாத்மா கபீர்தாஸ்(1925)

R. Prakash
லைலா என்ற பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தார் பிரகாஷ். எக்கச்சக்க காசுகள் ரசிகர்கள் பைகளிலிருந்து இந்த தந்தை-மகனின் பைகளுக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தது. அண்டை நாடுகளுக்கும் இவர்கள் புகழ் கப்பலேரி போயிற்று. பணமாக உறுமாறி திரும்பி வந்தது.
பிரகாஷும் கப்பலேறினார். ஏற்கனவே காமிராமேன் ஆன பிரகாஷ் தன் திறமையை சத்தாக்க இங்கிலாந்து சென்றார். திரைப்படத் தயாரிப்பை முறையாக லண்டனில் “பேக்கர்ஸ் மோஷன் பிக்ஸ்ர்” ஸ்டுடியோவில் கற்றார். ஹாலிவுட் போனார். டி.ட்பிள்யூ. கிரிஃப்ஃபித் மற்றும் சிசில் பி டிமெல்லுடன் பணி புரிந்தார். வென்றார். வந்தார். மேலும் படங்கள் தந்தார்.
December 4, 2008
”தியேட்டர்” – திரையுலக வரலாறு 4
Posted by Bags under Films, History of Tamil Films, Indian films, Tamil movies, Tamil reading | குறிச்சொற்கள்: Crown talkies, Gaiety theater, Globe theater, Imperial theater, Jos bioscope company, Karaiyellaam shenpakappoo, Life of jesus christ, Madras high court, Ottraivadai theater, Ragupathi vengiah, Roxy theater, Samikkannu vincent |[6] Comments
ஊமைப் பட காலத்தில் தியேட்டர்கள் பலவிதத்தில் இருந்தது. சானம் பிடிக்கும் கருவி இருக்கும் முக்காலி போல் இருக்கும் ஒரு இயந்திரம் “கரையெல்லாம் செண்பகப்பூ” என்று திரைப்படத்தைப் பார்த்து பயாஸ்கோப் என தெரிந்து கொண்டேன். ஓரு வேளை அது தான் அன்றைய நடமாடும் தியேட்டராக இருந்திருக்குமோ? சாமிகண்ணு வின்செண்ட் என்பவர் 1905ல் எடிசன் சினிமட்டோகிராபி என பெயர் கொண்ட டூரிங் தியேட்டரை உருவாக்கினார். அவர் பல இடங்களுக்குச் சென்று ”Life of Jesus Christ” என்ற படத்தை திரையிட்டார். மலபாரை சேர்ந்த ஜாஸ் பயாஸ்கோப் கம்பெனி அன்றைய சென்னையில் திரைப்படங்கள் திரையிட்டார்.
பொதுவாக இது போன்ற டூரிங் தியேட்டர்கள் கொண்டு வரும் திரைப்ப்டங்கள் டெண்ட் தியேட்டரில் திரையிடப்படும். சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கலாம். படத்தை 2 வாரம் ஓட்டுவார்கள். இப்படி பட்ட தியேட்டர்கள் வெகுவிரைவில் சிலருக்கு நிரந்தர தியேட்டர்கள் நிறுவுவதற்க்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது.
அப்படி பட்டவர்களில் ஒருவர் தான் ரகுபதி வெங்கையா. பெட்டி கடை வைத்து, பின்னர் மளிகை கடையாக்கி, அதன் பின்னர் பெரிய ஹோல் சேல் கடையாக்கி, பின்னர் கம்பெனி ஆரம்பிப்பது போல் ஒரு போட்டோகிராஃபராக இருந்த ஆர். வெங்கையா டூரிங் தியேட்டர் நடத்தி, பின்னர் நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி……..மனிதர் பல தியேட்டர்களுக்கு அதிபதி ஆகிவிட்டார். முதலில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் பல சின்ன சின்ன ரீல்களை திரையிட்டுக்கொண்டிருந்தார். அதை பார்ப்பதற்க்கும் ஒரு கணிசமான கூட்டம் இருந்ததாகத் தெரிகிறது. அதில் வசூலைப் பார்த்த வெங்கையா ஒரு டூரிங் தியேட்டரை சென்னை உயர் நீதி மன்றம் முன்பு அமைத்தார். இலங்கை மற்றும் அன்றைய சென்னை சமஸ்தானம் முழுவதும் அவருக்கு வசூல் வேட்டைதான். விடுவாரா? அடுத்த கட்டமாக நிரந்தர தியேட்டர் கட்ட முடிவெடுத்துவிட்டார். 1913ல் “கெய்ட்டி” தியேட்டரை நிறுவினார்.
இன்றும் இது இருக்கிறது. பின்னர் க்ளோப் தியேட்டர் என்று ஒரு நிரந்தர தியேட்டரை புரசைவாக்கத்தில் நிறுவினார். அது தான் பின்னர் ”ராக்ஸி” தியேட்டராகியது. பின்னர் 1918ல் ”கிரௌன் டாக்கீஸ்” என்ற தியெட்டரை மிண்ட்டில் நிறுவினார். அதன் பின்னர் மதுரைக்கு படையெடுத்தார். அங்கே “இம்பீரியல்” தியெட்டரை நிறுவினார்.
இதற்கெல்லாம் முன்னரே மிண்ட்டில் “ஒற்றைவடை” தியேட்டர் 1872ல் உருவானது.
Saradhaa says:
(முக்காலி போன்ற அமைப்புள்ள) பயாஸ்கோப்புகள், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்துக்கு முன்னரே பலபடங்களில் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில, 1961-ல் ‘திலகம்’ படத்தில் (பயாஸ்கோப்பு பாத்தியா), 1969-ல் ‘குருதட்சணை’ படத்தில் தங்கவேலு (பாரு பாரு நல்லாபாரு), 1972-ல் ‘நீதி’ படத்தில் ஜெயலலிதா (ஓடுது பார் நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்பொண்ணு), இன்னும் பல இருக்கலாம். சட்டென நினைவில் வந்தவை இவை.
திரு வெங்கையா நிறுவியவற்றுள் சென்னையில் தற்போது ‘கெயிட்டி’ மட்டுமே உள்ளது. கிரௌன், ராக்ஸி தியேட்டர்கள் இடிக்கப்ப்ட்டுவிட்டன. மதுரை இம்பீரியல் பற்றி தெரியவில்லை.
முன்பு ‘THE MADRAS THEATRES’ என்ற நூலில், வால்டாக்ஸ் ரோட்டில் இருந்த ஒற்றைவாடை கொட்டகைக்கு அடுத்தபடியாக ராயபுரத்தில் ‘பிரைட்டன் டாக்கீஸ்’ என்ற அரங்கம் நிறுவப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. அது சரியான தகவலா என்று தெரியவில்லை. (பிரைட்டன் இப்போது உள்ளதா என்பதும் தெரியவில்லை. 1980-களில் அதில் படம் ஓடியது).
