திடீரென்று போன வருஷம் எத்தனை தமிழ் படம் வந்தது, அதில் எத்தனை பார்த்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. நல்ல வேளையாக வந்த படங்களின் லிஸ்ட் இங்கே இருக்கிறது. சரியாக 101 படங்கள் வந்திருக்கின்றன. இதில் நான் 22 படங்களை பார்த்திருக்கிறேன். இவற்றுக்கான ஒன் லைன் விமர்சனகள் கீழே:
பீமா: டைம் வேஸ்ட் – விக்ரம் “பூடா, பூ” என்று உருகும் ஒரு காட்சிதான் தேறும்.
அஞ்சாதே: பார்க்கலாம். அந்த ஒற்றைக்கை நடிகர், பிரசன்னா, பாண்டியராஜன், கத்தாழக் கண்ணாலே பாட்டு எல்லாம் நன்றாக இருந்தது.
வெள்ளித் திரை: பார்க்கலாம். பிரகாஷ் ராஜ் ஹீரோ ஆக முடியாமல் அலைவது ரியலிஸ்டிக் ஆக இருந்தது.
சண்ட: டைம் பாஸ்
யாரடி நீ மோகினி: பார்க்கலாம். ரகுவரன் முதல் பகுதியிலும், சரண்யா இரண்டாம் பகுதியிலும் கலக்கினார்கள்.
நேபாளி: டைம் வேஸ்ட்.
சந்தோஷ் சுப்பிரமணியம்: ஜெனிலியா ஓவர் ஆக்ட் செய்தாலும், பார்க்கலாம். டைம் பாஸ்.
அறை எண் 305இல் கடவுள்: கட்டாயமாக பாருங்கள்
குருவி: கொலை. விவேக், விஜய், திரிஷா சென்னையில் கைப்பையை தேடி அலைவது மட்டும்தான் ரசிக்கும்படி இருந்தது. என் பெண்களுக்கு “நோக்கி நோக்கி நோக்கி நோக்கி” பாட்டு பிடித்திருந்தது.
தசாவதாரம்: குறைகள் இருந்தாலும் பார்க்கலாம். முழு விமர்சனம் இங்கே.
ஆயுதம் செய்வோம்: டைம் பாஸ். முழு விமர்சனம் இங்கே.
வல்லமை தாராயோ: “உன்னைத்தான் உன்னைத்தான்” பாட்டு நன்றாக இருந்தது. டைம் வேஸ்ட்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு: வேஸ்ட்
சுப்ரமணியபுரம்: பார்க்கலாம். முழு விமர்சனம் இங்கே.
குசேலன்: போர்.
சத்யம்: கொடுமை.
ஜெயம்கொண்டான்: பார்க்கலாம்.
தாம்தூம்: வேஸ்ட்
சரோஜா: பார்க்கலாம்.
ராமன் தேடிய சீதை: பசுபதிக்காக பாருங்கள்.
துரை: டைம் பாஸ்
சேவல்: ஏதோ
பாருங்கள் என்று சொல்லக்கூடிய படங்கள், அறை எண் 305இல் கடவுள், ராமன் தேடிய சீதை மட்டும்தான். தசாவதாரம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம் வித்தியாசமான படங்கள். ஜெயம்கொண்டான், வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், யாரடி நீ மோகினி, சரோஜா பார்க்கலாம். ஆயுதம் செய்வோம் டைம் பாஸ்.
ஜனவரி 3, 2009 at 8:10 பிற்பகல்
நல்ல அலசல். சப்பை படங்கள் தான் நிறைய.
My Fav: தசாவதாரம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம்,சரோஜா
வாழ்த்துக்கள்
ஜனவரி 4, 2009 at 2:59 மு.பகல்
சூர்யா,
அலசலா? ஒரு லைனுக்கு மேல் எழுதக் கூடாது என்று முயற்சி செய்தேனே!
ஜனவரி 4, 2009 at 4:12 மு.பகல்
ஆர்.வி -
நேபாலி, பீமா, வல்லமைத் தாராயோ – டைம் வெஸ்ட் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
2008ன் சிறந்த படமாக எதனை தேர்ந்தெடுப்பீர்கள். எனக்கு அஞ்சாதே.
நிங்க twitter ல் சேர நேரம் வந்து விட்டது. ஒரு விமர்சனம் செய்ய தொடங்கி விட்டீர்கள்.
http://www.twitter.com க்கு வருக வருக என்று அழைக்கிறேன்…
ஜனவரி 4, 2009 at 6:25 மு.பகல்
முரளி,
எனக்கு அறை எண் 305-இல் கடவுள். அதுதான் கட்டயாமாக பார்க்க வேண்டிய படம். அஞ்சாதேயும் நல்ல படம்தான்.
ட்விட்டுவதை பற்றி யோசிக்க வேண்டும்…
ஜனவரி 4, 2009 at 5:21 பிற்பகல்
இத்தனை படங்களையும் நீங்கள் பார்த்த பின்னரும் நல்ல மனநிலையோடு இருப்பது எட்டாவது அதிசயம்…எதற்கும் கின்னசுக்கு எழுதி போடுங்கள்
இந்த லிஸ்டில் நான் பார்த்த படம் தசாவதாரம், அஞ்சாதே
இதில் தசாவதாரம் ஓடியதற்கு காரணம் கமல்…நல்ல மசாலா..ரேசி ஸ்கிரீன்பிளே… கே.எஸ்ரவிகுமார்…போதாமைக்கு பிளாக் உலகின் கேயாஸ்தியரி ஜல்லிகள்…ரிலீஸ் நேரத்தில் மற்ற படங்கள் ஏதும் ஓடாத்தால் கிடைத்த வின்டோ ஸ்பேஸ்…. அவ்வளவே…எனக்கு பிடித்த காரெக்டர் பிளெட்சர…! அர்னால்ட் டெர்மினேட்டரின் பத்தாம் பாகத்தில் நடித்தால் கமலை இமிடேட் செய்ய முயற்சிக்கலாம்…
அஞ்சாதே- இது ஒரு ஹெவி மூவி…இதன் தாக்கம் மனதை விட்டு அகல சிறிது நேரமாகும். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் சிறப்பு. தரமான ஆங்கில டிராமா genre படங்களுக்கு சற்றும் குறைவில்லாத படம் . இது போன்ற படங்கள் தான் சினிமா பார்த்த ஒரு நிறைவை தருகிறது…டாரன்டினோ பாணியிலான ஷாட்கள், ஸ்லோ மேஷன் , ஸைலன்ஸ் போன்ற அலங்காரங்கள் இல்லையென்றாலும் கூட இந்த படம் ஓடியிருக்கும்.
இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்..என்ன முன்னதை ஆக்குவதற்கு ஆன செலவில் 10% கூட பின்னதற்கு ஆகியிருக்காது…!!!
ஜனவரி 4, 2009 at 5:22 பிற்பகல்
என்னுடைய சிறந்த படத்திற்கான தேர்வும் அஞ்சாதே தான்…!!
ஜனவரி 5, 2009 at 3:27 மு.பகல்
அரை டிக்கெட்,
அஞ்சாதே ஒரு வித்தியாசமான முயற்சி, நன்றாக வந்திருக்கிறது. உங்களுக்கும் முரளிக்கும் ஒத்துப் போகிறது!
ஜனவரி 5, 2009 at 7:11 பிற்பகல்
//உங்களுக்கும் முரளிக்கும் ஒத்துப் போகிறது!//

ஜனநாயகம் வாழ்வதே அங்குதானே…
பல வேற்றுமைகள் சில ஒற்றுமைகள் ஆனால் ஒன்றை மற்றொன்று பாதிக்க்கூடாது…
கருத்துகளின் மோதல்கள் இருப்பினும் குட்நைட் சொல்லும் போது நாம் நன்பர்களே..
மறுநாள் அடுத்த மோதலை எதிர்நோக்கி!
ஜனவரி 5, 2009 at 7:15 பிற்பகல்
ஆர்.வி வினவு தளத்தில் உங்களை சில நாட்களாக பார்க்க முடியவில்லையே?
ஜனவரி 6, 2009 at 6:15 மு.பகல்
வினவு,
இந்த பொழுதுபோக்கு பதிவை நீங்கள் பார்த்தது மகிழ்ச்சி.
உங்கள் சமீபத்திய பதிவுகள் (தெரசா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் போலித்தனம்) ஆகியவை எனக்கு செய்திகள், எனக்கு புதிய கருத்து எதுவுமில்லை. அழகிரியை பற்றி நீங்கள் எழுதியில் எனக்கு முழு இசைவு உண்டு. அவ்வளவுதான், மற்றபடி அவ்வப்போது படிக்கிறேன்.
கருத்து வேற்றுமைகளை பற்றி நீங்கள் சொன்னது அருமை!
ஜனவரி 5, 2009 at 7:25 பிற்பகல்
//உங்களுக்கும் முரளிக்கும் ஒத்துப் போகிறது!//
அவர் இதை ஒப்புக்கொள்வாரா தெறியவில்லை.
என்னை பொருத்தவரை மகிழ்ச்சியே….!!!
ஜனவரி 5, 2009 at 8:14 பிற்பகல்
என்னடா இது பெரிய கையெல்லாம் வந்து போது… மீ த எஸ்கேப்பு !!!
ஜனவரி 7, 2009 at 1:15 பிற்பகல்
அறை எண் 305ல் கடவுள் 2008ஆம் ஆண்டின் மரண மொக்கை. என் விருப்பங்கள் இங்கே.
ஜனவரி 7, 2009 at 5:39 பிற்பகல்
ரவிசங்கர்,
மறுமொழிக்கு நன்றி! உங்கள் போஸ்டையும் பார்த்தேன் – பிரிவோம் சிந்திப்போம் எனக்கு அவ்வளவாக பிடிக்காத சுஜாதா நாவல். படமும் பார்க்கவில்லை.
ஜனவரி 8, 2009 at 9:29 மு.பகல்
பிரிவோம் சந்திப்போம் படத்தலைப்பு மட்டும் சுசாதாவின் புதினத்தை ஒத்தது. கதை வேற. சுசாதாவின் கதையை ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் இப்ப படமாக்கிட்டிருக்காங்க.
ஜனவரி 8, 2009 at 3:54 பிற்பகல்
ஆர்.வி-
சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் பாகம் 2 படித்திருக்கிறேன்.
நல்லாவே இருந்தது எனக்கு…கடைசியில் திரைப்படம் போல கொஞ்சம் அதிரடி தடாலடியாக நாடகத் தன்மையோடு முடித்திருப்பார்.
ஜனவரி 8, 2009 at 5:03 பிற்பகல்
ரவிசங்கர், நான்தான் கொஞ்சம் குழம்பிவிட்டேன். இது சேரன், ஸ்னேஹா நடித்த படம் இல்லையா? மோசம் இல்லை, ஆனால் கொஞ்சம் ஸ்லோவான படம். பார்க்கலாம்.
முரளி, சுஜாதாவின் பிற்கால புத்தகங்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. அவற்றில் வேகம் குறைவு என்று ஒரு நினைப்பு.
ஜனவரி 16, 2009 at 6:10 பிற்பகல்
>>>யாரடி நீ மோகினி: பார்க்கலாம். ரகுவரன் முதல் பகுதியிலும், சரண்யா இரண்டாம் பகுதியிலும் கலக்கினார்கள்.
சரண்யா இதில் எப்பொழுது வருகிறார்?
ஜனவரி 18, 2009 at 12:55 மு.பகல்
பக்ஸ்,
இது புது சரண்யா. நாயகன் படத்து கதாநாயகி இல்லை.