தில்லானா மோகனாம்பாளில் நாதசுரம் வாசித்த எம்.பி.என். பொன்னுசாமி, சேதுராமன் சகோதரர்கள்
April 10, 2009 2 மறுமொழிகள்
நன்றி, விகடன்!
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்னும் பாடலும், அந்த நடன கீதத்துக்கு ஏற்ப நலமாக ஒலிக்கும் நாதசுர இசையும் எல்லோரையும் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன. நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கியவர்கள், நாதசுரக் கலைஞர்களான திருவாளர்கள் மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள் ஆவர்.
பம்பாய், டெல்லி போன்ற பெரிய நகரங்களிலும், தமிழகத்தின் பல இடங்களிலும் நாதசுர இசையினால் பலருடைய இதயங்களைக் குளிர்விக்கும் இவர்கள் ராஷ்டிரபதி பவனிலும் இசை மழை பொழிந்திருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் முன்னாள் ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் இவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார். திரு.காமராஜர் இந்தச் சகோதரர்களின் இனிமையான நாதசுர வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து இவர்களுக்கு அளித்த தங்க மெடலை, மத்திய உள்துறை அமைச்சர் திரு.சவானிடம் யுத்த நிதிக்காக மனமுவந்து கொடுத்துத் தங்கள் மனமும் தங்கமென அறிவித்திருக்கிறார்கள்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன், இயக்குநர் ஏ.பி.என், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இருவர் முன்னிலையில் முதலில் வாசித்திருக்கிறார்கள்.
அடுத்த நாள், இன்னொரு முக்கியஸ்தர் முன்னிலையிலும் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு மணியல்ல, இரண்டு மணியல்ல, மூன்று மணி நேரத்துக்கு மேல் அவர்களின் நாதசுர இசையைக் கேட்டுக் களித்த பிறகே படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தாராம் அந்த முக்கியஸ்தர்.
அவர் வேறு யாருமல்ல. தில்லானா மோகனாம்பாளில் நாதசுர கலைஞராகத் தோன்றி, நாதசுரக் கலைஞர்களே வியக்கும் வண்ணம் முகபாவங்களுடன் அற்புதமாக வாசித்த பிறவிப் பெரும் நடிகர் சிவாஜி கணேசன்தான்.
நாதசுர வித்துவான்கள் நாங்களா, அவரா என்று வியக்கும் வண்ணம் சிக்கல் சண்முக சுந்தரம் வெளுத்து வாங்கிவிட்டார் என வாய்க்கு வாய் நடிகர் திலகத்தை மெச்சிப் பூரிக்கிறார்கள் நாதசுர சகோதரர்கள்.
ஏ.பி.நாகராஜன் பற்றிக் கேட்ட போது “அவர் எங்களின் உற்ற நண்பர். அவரை எங்கள் குடும்பமே தெய்வமாக வணங்கி வருகிறது. தில்லானா மோகனாம்பாள் வெளியாவதற்கு முன் எனக்கு ஓர் ஆபரேஷன் நடந்தது. அச்சமயம் அதற்கான செலவுத் தொகை பூராவையும் கொடுத்து, என் உயிரையே மீட்டுக் கொடுத்த இரக்க உள்ளம் படைத்தவர் ஏ.பி.என்.” என்றார் சேதுராமன்.
APN is great…
I live in new york, USA about 55 years old. Although I saw thyeis movie Thillana Mohanambal during my eighth or 9th std, the nadaswaram recital by MPN brothers are still echoing in my mind and in my MP3 as well all other musical dvd or audio cd, the most favorite and the very first audios are these nadaswarams only.
specially, the one that sivaji and avm rajan (of course shri mpn brothers in reality) recite when Padmini enters into temple to listen their nadaswaram recital ( may be called Nagumomu) and the nadaswaram music during dance/nadaswaram competition.. oh wow what a wonderful mix of divine and music combo that recital has.,.,.,
I love each moment of nadhawaram recital on both these raagas, including the wonderful vibrant rhythms of special thavils…. even after 100years, these 2 nadaswaram musics in this movie will take its pride.
r
everyone knows great music recital s by shri MPN brothers, but gudos and thanks to Director who made the great nadaswaram available for even the common public to enjoy,
I wish your website / this blog to upload with these 2 scenes of special nadaswaram recitals of this movie thillana mohanambal. thanks