மலேசியா வாசுதேவன் மறைவு

ஈ.கோபால் அனுப்பியுள்ள செய்தி

 

பிரபல பின்னணிப்பாடகரான மலேசியா வாசுதேவன் கடந்த 25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த்திரைப் பாடல்களைப் பாடியுள்ளார்.     ‘’பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா’’,   ‘’ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை’’ என்று ஏராளமாக பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

மேலும் இவர்  முதல் வசந்தம், ஊமை விழிகள், திருடா திருடா உட்பட ஏராளமான  திரைப்படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராக இருந்தார்.

 

இவரது மகன் யுகேந்திரன்,  பின்னணிப்பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார்.  இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப்பாடகராக உள்ளார்.

சமீபகாலமாக  மலேசியாவாசுதேவன் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருந்தார்.    தன்னால் வளர்ந்தவர்களும்,  திரையுலக நண்பர்களும் தன்னை வந்து நலம் விசாரிக்கவில்லை என்று ஒரு  பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு மலேசியா வாசுதேவன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers