மறக்க முடியவில்லை
செப்ரெம்பர் 22, 2008 2 பின்னூட்டங்கள்
மறக்க முடியுமா பாட்டுக்களில் இரண்டு இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
மனிதர்களின் தேவைகளை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு என்றுதான் வழக்கப்படுத்துவோம். இந்த வழக்கத்தினால் பாட்டை இப்படி எழுதி இருக்கலாம். மோனையும் இருந்திருக்கும்.
காற்றும் நீரும் உணவு
காலும் கையும் ஆடை
வானும் நிலமும் வீடு
வாழ்வு ஏழைக்கு சிம்பிள்
எழுதப்ப்பட்டிருக்கும் வரிகளில் வரிசை இல்லை, எதுகை மோனை இல்லை.
வானும் நிலமும் வீடு
காற்றும் நீரும் உணவு
காலும் கையும் ஆடை
ஏழை வாழ்வு சிம்பிள்
சோகமும் இல்லை, ஒரு சுதந்திரம் தெரிகிறது. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை தெரிகிறது. சிம்பிள் என்று சொல்லும் அலட்சியத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் வெளிப்படுகிறது. இந்த சுதந்திரத்துக்கு வரிசைப்படுத்தாத தேவைகள் மிக நன்றாக பொருந்துகின்றன. வரிசைப்படுத்தி இருந்தால் தப்பாக இருந்திருக்காது – ஆனால் இதில் புதுக் கவிதை போல ஒரு rebellion தெரிகிறது. மெட்டில் உள்ள துள்ளல் இந்த சுதந்திரத்தை அருமையாக வெளிப்படுத்துகிறது. வரிகள் மெட்டுக்கு மெருகு சேர்க்கின்றன. சுத்தி வளைப்பானேன், ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க!
காகித ஓடம் பாட்டில் ஒரு அமானுஷ்யத்தனம் இருக்கிறது. நடு இரவில் தனியாக காட்டுப்பகுதியில் இந்த குரலை கேட்டால் கதி கலங்கிவிடும். எஸ்.எஸ்.ஆர் தேவிகாவை சந்திக்கவரும்போது என்ன அனல் பறக்கும் வசனம் பேசியிருந்தாலும் இந்த எஃபெக்ட் வந்திருக்காது. ஒரு குறை – டி.எம்.எஸ். பாடுவது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் சுசீலாவுக்கும் ஹை பிட்ச் கொஞ்சம் பிசிரடிக்கிறமாதிரி இருக்கிறது. ஜானகியின் குரல் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? டி.எம்.எஸ்., சுசீலா சேர்ந்து பாடுவதை விட சுசீலா தனியாக பாடுவதுதான் எனக்கு பிடித்திருக்கிறது
What about ‘Vasantha kalam varumo’ sung by Suseela with KJY’s humming? Was it not there in the movie?
Suseela Rasigan,
Thanks for the reply.
I beleive this song is in this movie, but on that day Sun TV guys cut this song out. 😦
I had mentioned this in my review.