எம்.கே. தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள் – சோகமான கதை !
நவம்பர் 28, 2010 1 பின்னூட்டம்
by mkrsantharam » Mon Nov 01, 2010 3:47 pm
” ஹேய்…….
வாழ்விலோர் திரு நாள் ! …… “
பாய்ந்தோடும் வெள்ளைக் குதிரை யில் இரு கால்கள் அசைந்தாடுவது
முதலில் தெரிய , பின்னர் காமிரா மெல்ல மெல்ல மேல் நோக்கி
நகர்ந்து ………..
பாகவதரின் சிரித்த முகத்தை ” போகஸ் “செய்கிறது !
ஆமாம் …..
16 – 10 – 1944 , அன்று தீபாவளி !
” ஹரிதாஸ் “
அன்றைய தினம் ” ரிலீஸ் ” செய்து , படத்தின் ஆரம்பக் காட்சியில்
பாகவதர் மேற்கண்டவாறு பாடிக்கொண்டே வந்ததைப் பார்த்து மக்கள்
கைகளைத் தட்டியும் , ” விசில் ” அடித்தும் மகிழ் வடைந்தனாறாம் !
( அப்போது அடியேன் …… இல்லே ..இல்லே … என் அண்ணன் கூட
பிறக்கவில்லை ! )
அது மட்டுமா !
பாகவதர் இந்த பாடலைப் பாடிக்கொண்டே ……..
கண்ணடிக்கிறார் !
இந்த காட்சியில் பெண்கள் சொக்கிப் போனாராம் !
தமிழ் சினிமா வரலாற்றில் :
” ஹீரோவுக்கான அசத்தலான அறிமுகக் காட்சியை
அறிமுகம் செய்தது இந்த படம்தான் !
” குடும்பப் பெண்கள் ” பாகவதரின் அழகிலும் பாடலிலும் மயங்கி
அவரைக் காண பின் தொடர்ந்து செல்லும் நிலை உருவானதால்
பல குடும்பத்தலைவர்கள் , அந்த பெண்களை தங்கள் தங்கள்
வீட்டுக்கு அழைத்து செல்வதில் மிகுந்த சிரமம் அடைந்தனராம் !
பாகவதருக்கு ” காதல் காய்தம் ”
( நடிகர் நாகேஷ் , தான் நடிக்கும் படங்களில் ” காதல் கடிதம் ” என்று சொல்லும் இடங்களில் இப்படித்தான் சொல்லுவார் ! ) எழுதிய பெண்கள் ஏராளம் !
இந்த விஷயங்களை அடியேன் மிகைப் படுத்தி எழுதவில்லை !
நடந்தது நடந்தபடி எழுதினேன் !
” ஹரிதாஸ் ” படம் வெளி வந்த பிறகு பாகவதரின் புகழ் உச்சியில்
இருந்தது உண்மை !
இன்னொன்று :
ஒரு சினிமா நடிகரைப் பார்ப்பதர்க்கென்று மக்கள் கூட்டம்
கூட்டம் ஆக வருவது , பாகவதருக்கு பின்னர் தான் ஏற்பட்டது !
ஒரு முறை பாகவதர் கொச்சின் போய் விட்டு இரயில் இருந்து
திரும்பும் போது , பாகவதரைப் பார்த்தே ஆகா வேண்டும் என்று
மக்கள் இரயில் நிலையத்திற்கு வந்து அவரை ” தரிசித்து ” விட்டுத்தான்
இரயிலை ஓட்ட விட்டார்கள் ! இதனால் இரயில் ஐந்து அல்லது ஆறு
மணி நேரம் தாமதம் ஆவதுண்டு ! பாகவதர் வருவதை அறிந்த மக்கள்
இரயில் நிலையத்திற்கு வருவர் ! ” பிளாட்பாரம் டிக்கட் ” அனைத்தும்
விற்று விடுமாம் ! இரயில் நிற்கத் தேவை இல்லாத நிலையங்களுக்குக்
கூட இரயில் வண்டி நிறுத்தப்படுமாம் ! மக்கள் பாகவதரை ” வழி
அனுப்பி விட்டால்தான் ” இரயில் கிளம்பு அனுமதி கிடைக்குமாம் !
சுருக்கமாக சொல்லப் போனால் :
மகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் அவரைப்
பார்ப்பதற்கு கூடிய கூட்டம் போல் , பாகவதருக்கு ஏற்பட்டது !
” ஹரிதாஸ் ” படம் ” சூப்பர் ஹிட் ” !
எப்போதும் ஒரு சமயத்தில் ஒரே படத்தில் நடிக்கும் பழக்கம் உள்ள
பாகவதர் , ” ஹரிதாஸ் ” வெற்றிக்கு பிறகு நிறைய படங்களை ஒத்துக்
கொண்டார் ! ” அட்வான்ஸ் ” வாங்கிக் கொண்டார் !
அந்த படங்கள் :
1 ” ராஜ யோகி ” 2 . ” வால்மீகி
3 . ” பில்ஹணன், 4″ ஸ்ரீ முருகன்”
5 . “உதயணன் ” 6 .” பக்த மேதா”
7 .” ஜீவகன்” , 8 .. ” காளிதாஸ்”
9 ” நம்பியாண்டார் நம்பி “
இத்தனைப் படங்களை ஒத்துக்கொண்டு புகளின் உச்சியில் இருந்த
பாகவதருக்கு ……
ச
ரி
வு
ஏற்பட்டது !
எப்படி ?
” ஹரிதாஸ் ” வெளியான அதே தீபாவள் நாள் , தான் தங்கியிருந்த
திருச்சி பங்களாவை விட்டு தன நண்பர்களை சந்திக்க குதிரை
வண்டியில் ( அந்த கால ” பென்ஸ் ” கார் ! ) கிளம்பி வண்டியில்
கிளம்பிப் போன பாகவதருக்கு விபத்து நேர்ந்தது ! சாலையில்
குவித்து வைத்திருந்த கருங்கற் கற்களில் ( அந்த காலத்திலும்
இதே ” கர்மாந்திரம் ! ” ) வண்டி சக்கரம் மாட்டிக்கொண்டு வண்டி
குடை சாய்ந்தது . பாகவதரின் இரு முழங்கால்களில் பலத்த அடி !
” ஹரிதாஸ் ” படத்தில் , இறுதியில் வருவது போல் பாகவதர்
தவழ்து நடக்கிறார் என்று அந்த காலப் பத்திரிகைகள் ” அவல ”
சாப்பிட்டன ! இந்த சம்பவத்தை பாகவதர் ஓர் அபசகுனம்
என்றே நினைத்தார் !
அவர் நினைத்தது உண்மையானது !
” ஹரிதாஸ் ” படம் 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கும்போது , போர் முனைச் செய்திகளைக் கேட்பதற்காக
வானொலியை நாடும் அந்த கால மக்கள், அந்த ” BREAKING NEWS ”
கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர் !
அந்த செய்தி :
” லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடிகர்
எம். கே. தியாகராஜா பாகவதர் கைது செய்யப்பட்டார் ! ”
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மட்டும் அல்ல ,
பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் , மற்றும் பிரபல
படத்தயாரிப்பாளர் ” பட்சி ராஜா ” எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாய்டு –
ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் . தமிழ் நாட்டை கலக்கிய
இந்த கொலை வழக்கு அந்த காலத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டது .
( ” இந்த கொலை வழக்கு பற்றி ஒரு தனித் தொகுப்பு ஆகா
எழுத அடியேனும் விருப்பம் ! எனவே , அந்த கொலை வழக்கு பற்றிய
விவரங்களை இங்கே இப்போது கொடுததால் , அடியேன் எழுத ஆரம்பித்த
தலைப்பில் இருந்து விலகிச் சென்ற மாதிரி ஆகிவிடும் ! “
இந்த வழக்கில் பாகவதர் சிக்கியது அவரது ” இமேஜ் ” ஐ மிகவும் பாதித்தது !
வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பாகவதர் பெரும் பொருட்
செலவு செய்தார் ! ஆனால் எல்லாம் வீண் ஆனது !
பாகவர் உட்பட ஆறு பேருக்கு ” ஆயுட் தண்டனை ” வழங்கப்பட்டது !
பாகவதர் இடிந்து போனார் ! கையில் இருந்த பணமெல்லாம் கோர்ட் ,
கேஸ் என்று என்று கரைய ஆரம்பித்தது .
போட்டிப் போட்டுக்கொண்டு ” அட்வான்ஸ் ” பணம் கொடுத்து படங்களை
” புக் ” செய்த படத் தயாரிப்பாளர்கள் , தங்கள் பணத்தை திருப்பித்
தரும்படி ” டார்ச்சர் ” செய்ய , வீட்டையும் நகைகளையும் விற்று
அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்து விடுமாறு தன வீட்டில்
உள்ளவர்களிடம் சொல்லி விட்டார் , பாகவதர் !
பாகவதர் நடித்துக்கொண்டிருந்த ” உதயணன் வாசவதத்தா ”
படம் அப்படியே நிறுத்தப் பட்டது ! அதற்கு பதில் அந்த படத்தில்
ஜி . என். பாலசுப்பிரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
அது போல் :
” ஸ்ரீ வள்ளி ” படத்திற்கு தி .ஆர்.மகாலிங்கம் அவர்களும் ,
” வால்மீகி ” படத்திற்கு ஹொன்னப்பா பாகவதரும் நடிக்க
ஆரம்பித்தனர் ! பாகவதர் பாடி ஒரு படத்தில் சேர்க்கவேண்டிய பாடல்
ஒன்றை இயக்குனர் கே. சுப்ரமணியம் , பி. யு . சின்னப்பா , டி. ஆர். ராஜகுமாரி
நடித்த ” விகட யோகி ” என்கிற படத்தில் சேர்த்துவிட்டார் !
அந்த படத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா ஏதோ ஒரு ரசாயனக் கலைவையை
தெரியாமல் குடித்து பின்னர் குரல் மாறி ” பாகவதர் குரலில் ” பாடுவதாக கதை !
பாகவதர் ” உள்ளே ” இருப்பதால் வந்த வினை !
ஆனால் ……..
இந்த தடைகளையும் மீறி ” ஹரிதாஸ் ” படம் மூன்று தீபாவளிகளையும்
கடந்து ஓடிக் கொண்டிருந்தது !
இரண்டு வருடங்கள் ! பாகவதரும் என்.எஸ் . கிருஷ்ணன்
ஆகிய இருவரும் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தனர் !
இந்த தண்டனையை எதிர்த்து ” அப்பீல் ” செய்தார் பாகவதர்
அப்போதைக்கு லண்டனில் உள்ள பிரிவியு கவுன்சில் தான் இந்தியாவுக்கு
” சுப்ரீம் கோர்ட் ! ” லட்சுமிகாந்தன் கொலையில் பாகவதரும் , என். எஸ்.
கிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது சரியாக உறுதி செய்யப்படவில்லை
என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது !
1947 , ஏப்ரல் மாதம் , ஒரு நாள் பாகவதரும் , என்.
எஸ் . கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டு
வெளியே வந்தனர் .
கிட்டத்தட்ட முப்பது மாத சிறை வாசத்தின் சோர்வு பாகவதரின் முகத்தில்
தெரிந்தது ! அந்த பொன்னிற தேகத்தில் பொலிவு இல்லை ! அன்றைய
வானொலியில் பாகவதர் விடுதலை ஆனது தான் தலைப்பு செய்தி !
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் தன தம்பியுடன் உடனே
சென்றது வடபழனி முருகன் கோவில் தான் ! பின்னர்
இரயில் ஏறி திருச்சிக்கு போனார் . வாசலில் அவர் குடும்பத்தினர் வெளியே
நின்று அவரை வரவேற்றனர் !
ஆனால் ……………… !
முன்பு போல் பாகவதரைக் காண வரும் ரசிகர்களின் கூட்டம்
இல்லை ! பாகவதரின் கண்களில் கண்ணீர் !
புகழை அடைய மிகவும் எளிது !
ஆனால் அதனைக் கட்டிக் காப்பது மிக அரிது !
இப்போதைய ” எந்திரன் ” ரஜினிக்கும் அந்த கவலை உண்டு !
ரொம்ப நாளைக்குப் பின்னர் குடும்பத்தோடு உணவு உண்டார் பாகவதர் !
மறு நாள் :
பட உலகில் உள்ள பல பட அதிபர்கள் அவரைப் பார்க்க வந்தனர் !
” அட்வான்ஸ் ” தொகையை வறுப்புரித்தி திருப்பி வாங்கிப் போன பட
அதிபர்களும் அதில் அதிகம் பேர் உண்டு ! யாரிடமும் நேரிடையாக
பாகவதர் பேசவில்லை ! அமைதியாக இருந்தார் ! எல்லோரும் அமைதியாக
உட்கார்ந்திருக்க , பத்திரிகையாளர்கள் பலர் அங்கே இருக்க பாகவதரின்
அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்க பாகவதர்
பேச ஆரம்பித்தார் !
” இந்த இரண்டரை வருடங்களில் உலகத்தை புரிந்து கொண்டேன் !
சினிமா உலகத்தையும் தெரிந்து கொண்டேன் ! இனிமேல் நான் சினிமாவில்
நடிப்பதாக இல்லை ! அடிப்படையில் நான் ஒரு சங்கீத வித்துவான் ! எனவே
சங்கீதத்தில் கவனம் செலுத்தப் போகிறேன் ! “
இந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது !
ஆனால் இசை உலகம் பாகவதரை ஏற்றுக்கொள்ளவில்லை !
காரணம் ?
” ஜெயில் – க்கு போய் வந்தவருக்கெல்லாம் எப்படி பாட
அனுமதிக்கலாம் ? ” என்று சபாக்கள் அவரைப் பற்றி இகழ்ந்து பேசின !
பாகவதர் நொந்து போனார் !
ஆனாலும் பாகவதர் மனம் தளராமல் கோவிலுக்கு சென்று ஆண்டவனின்
சன்னதிக்கு சென்று பாட ஆரம்பித்தார் !
விரைவில் பாகவதர் :
1 . ரேடியோ கச்சேரி
2 . கோவில் திரு விழா
3 . கல்யாண கச்சேரி
போன்ற நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார் !
ஓரளவு , அதில் வெற்றியும் பெற்றார் !
” ஆனால் இது மாதிரியான ” குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை ” விட
திரைப் படங்களில் மறுபடியும் நடித்தால் உங்களின் புகழ் மறுபடியும் பெருகும் !
ஒரு ” சுப்பர் ஹிட் ” கொடுத்த பின்னர் பட உலகில் இருந்து விலகி விடலாம் !
பின்னர் இசைத் துறையை நீங்கள் நாடலாம் ! “
என்று அவரின் ” நலம் விரும்பிகள் ” கேட்டுக்கொண்டனர் !
பாகவதர் யோசித்தார் !
அதில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார் !
மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் !
முன்னர் போல் மற்றவர்கள் முன்னாள் கைகளைக் கட்டி வேலை செய்வது
பாகவதருக்குப் பிடிக்கவில்லை !
தாமே சொந்தப் படங்களை எடுப்பது என முடிவு செய்தார் !
இதுதான் அவர் செய்த மாபெரும் தவறு என்று கூட சொல்லலாம் !
” ராஜ முக்தி “
அண்மைய பின்னூட்டங்கள்