ஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்


நான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.

தமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.

என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

ஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.

பிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன? சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.

தயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.

இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.

1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வரதப்பா, வரதப்பா, பஞ்சம் வரதப்பா


தலைப்பை இன்னும் கொஞம் மற்றி எழுதினால் சரியாக இருக்கும்.

”வந்ததப்பா, வந்ததப்பா, பஞ்சம் வந்ததப்பா”

தமிழ் திரையுலகம் பஞ்சத்தில் அடிபடுகிறது. அட, அசின் ஒரு சினிமாவுக்கு ரூபாய் 55 லட்சமும், கமல் ரஜனி ரூபாய் 10 கோடி, 20 கோடி வாங்கும் போது எங்கிருந்து பஞ்சம் வந்ததது என் நீஙகள் நினைக்கலாம். இவர்கள் ஒரு புறம் இப்படி வாங்கினாலும் தமிழ் திரையுலகத்தில் பணி புரியும் எத்தனையோ பேர்கள் ”கையில காசு, வாயில தோசை” ரேஞ்சில் தான் இன்னும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அந்த எக்கனாமிக்ஸில் நுழையப் போவதில்லை இங்கே.

இங்கே டிஸ்கஸ் செய்யப் போவது இசை பஞ்சம்,  கதை பஞ்சம். இது பரவாயில்லை. பெயருக்குமா பஞ்சம்? (ஆனாலும் இவையெல்லாம் உண்மையான் பஞ்சமா? அல்லது சோம்பேறி தனத்தாலும் ”ஈஸி வே”யில் பணம் பண்ணும் முயற்ச்சியா என்பது என் சிற்றறிவிற்க்கு சரியாகப் புலப்படவில்லை.

இசைக்கு எப்போதும் பஞசம் இருப்பது போல் தெரிகிறது. ஹிந்தியை தமிழில் இறக்குமதி செய்வதும், தமிழ் திரை இசையை வட இந்தியாவிற்க்கு ஏற்றுமதி செய்வதும் சர்வ சாதாரணம். எத்தனையோ உதாரணங்கள் கூறலாம்.  ஒன்று இங்கே: ”ஆராதனா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் “குங்கு நாரே ஹி ஹெய்ன்” என்ற பாட்டு தமிழில் இறக்குமதி செய்யப்பட்டது.

(Quiz கேள்வி1: அந்தப் பாடல் எது?)

இது மாதிரியான இசை வர்த்தகம் ஒரளவு அந்த காலத்தில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளபபட்டது. எஞ்ஜாய் பண்ணப்பட்டது. இப்பொழுது தமிழிலேயே பழைய தமிழ் பாடல்களையே ஓரளவு rap மியூசிக்கை மிக்ஸ் செய்து ரீமிக்ஸாக கொடுக்கிறார்கள். (எனக்கு இது என்னவோ ஒரு சாஃப்ட்வேரை ஸ்க்ராட்ச்சிலிருந்து எழுதாமல் க்ளோன் செய்து சிறிது டீ-பக் மற்றும் ஒன்றிரண்டு புதிய ஃபீச்சர்ஸ் சகிதமாக உருமாற்றி கொடுப்பது போலிருக்கிறது – அது நிச்சயம் சோம்பேறி தனத்தின் கண்டு பிடிப்பே.)  இது ஸ்வரப் பஞ்சம் தானா? ”பொன் மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்”, “என்னம்மா கண்ணு சவ்க்கியமா”, என பல உதாரணங்கள். அண்மையில் தமிழ் பாடலிகள் உடனுக்குடன் ரீமிக்ஸ் செய்யப்படுவது போல் தோன்றுகிறது. திரையில் கார்த்திக் பாடும் “ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா” அதற்க்குள் ரீமிக்ஸ் ஆகி அர்ஜுன் பாடுகிறார்.

(Quiz கேள்வி2: இந்த ரீமிக்ஸ் ஒரு ட்ரெண்ட் ஆவதற்க்கு முன்னரே (pre-remix eraவில்), ”பொன் மகள் வந்தாள்” ) நைசாக, சத்தமில்லாமல் ஒரு திரைபடத்தில் சொருகப்பட்டது. அந்தப் படம் என்ன? Hint – ”பா”வில் ஆரம்பிக்கும் ஒரு டைரக்டர் வெளியிட்டப்படம்.

மற்றுமொரு டெக்னிக் பல திரைபடங்களில் வந்த பாடல்களை கலந்து (முதல் நான்கைந்து வரிகளை வைத்து)  ஒரு பாடல் சீனை ஓட்டுவது. இது போன்ற பாடல் கட்சிகளை 60, 70களில் வந்த திரைபடங்களில் அதிகம் பார்க்கலாம். அது பஞ்சத்தினாலா இல்லை மக்களுக்கு ஒரு நாவல்டி கொடுப்பதற்க்கா என்று தெரியவில்லை. இன்னும் இப்படி பல யுக்திகள் திரையுலகத்தில்  கடை பிடிக்கப்பட்டுள்ளது. எல்லாம் நேரப் பஞ்சம், நாவல்டி என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. கொஞ்சம் சோம்பலாகவும் இருந்திருக்கலாம்.

Quiz கேள்வி 3: திரையில் விசு பாடும் ரீமிக்ஸ் பாடல் எது?

ரீமிக்ஸ் இசையை ஒரளவு ஏற்றுக் கொள்ளமுடிகிறது. அது அதன் இனிமையைப் பொருத்தது. கதையும் இப்படி ரசிகர்களால் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஏன்? கதையாசிரியர் பஞ்சத்தினாலா? ஹாலிவுட்டில் நல்ல திரைப்படங்கள் வந்தால் அதை தமிழில் எடுப்பது ஒரு வித சேவை (பாஸிட்டீவாக பார்த்தால்); “காப்பி” (நெகட்டீவாகப் பார்த்தால்); நஷ்ட ஈடு (கோர்ட்டில் பார்த்தால்); எப்படிப் பார்த்தாலும் நேற்று வந்த தமிழ் படங்களையும் இன்று வெர்சன் 2 ஆக வெளியிடுவது மிகவும் கடுப்படிக்கிறது.

Quiz கேள்வி 4: அந்நியன் கதையை சங்கர் எந்த ஹாலிவுட் திரை படத்திலிருந்து “இறக்குமதி” பண்ணினார்?

(உப கேள்வி – இதை எப்படி பார்க்கவேண்டும்? பாஸிட்டிவாகவா, நெகட்டீவ்வாகவா அல்லது கோர்ட்டிலா? 🙂 )

இப்பொழுதெல்லாம் பெயருக்கும் பஞ்சம் வந்து விட்டது. ”பொல்லாதவன்”, “பில்லா” என்று எத்தனையோ. இது ஒரு பெரும் குழப்பத்தில் முடியக்கூடும் என்று ஆராய்ச்சியாளர் தியோடர் பாஸ்கரன் கருதுகிறார். 100 வருடத்திற்க்கு பின்னர் வரும் ஆராய்ச்சியாளர்களை ”ஒரு சம்பாஷ்னையிலோ அல்லது ஒரு ஏட்டிலோ எந்தப் ”பொல்லாதவன்” பற்றிக் குறிப்பிடுகிறார்கள்?” என்று முடியை பிய்க்க வைக்கல்லாம்; இதனால் அவர்களை பொல்லாதவர்களாகவும் ஆக்கலாம்; ஆனால் இது இன்றய ட்ரெண்டாக இருந்தாலும் இது அவ்வப்பொழுது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

Alexandar Dumasஇன் ”The corsican Brothers” தமிழில் 1949ல் அபூர்வ சகோதரர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

Quiz கேள்வி 5 இந்த அபூர்வ சகோதரர்கள் திரைபடத்தில் நடித்த ஹீரோவின் பெயர் என்ன?

40 வருடங்கள்க்கு பின்னர் 1989ல் ”அபூர்வ சகோதரர்கள்” என்று கமல் திரைப்படம் ஒன்று வந்தது நினைவு இருக்கலாம். இதற்கு முந்தைய கால்கட்டத்திலும் இந்தப் பெயர் பஞசம் நடந்திருக்கிறது. 1934ல் கே. சுப்ரமனியம் இயக்கத்தில் தியாகராஜ பாகவதர், சுப்புலக்‌ஷ்மி  நடித்து வெளிவந்த “பவளக்கொடி” என்ற திரைப்படம் அதே பெயரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 1949ல் கோவையை சேர்ந்த பக்‌ஷிராஜா ஃபில்ம்ஸ் தயாரிப்பில் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ட் செய்ய டி. ஆர். மஹாலிஙகம், டி.ஆர். ராஜகுமாரி, மற்றும்  டி.இ. வரதன் நடித்து பவளக்கொடி வெளி வந்தது. இப்பொழுது நான் பவளக்கொடி பற்றி பேசினால், நீங்கள் “எந்த பவளக்கொடி?” என்று கேட்பீர்கள்.

இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக வந்தால் பரவயில்லை. ஆனால் இன்றைய trend தியோடர் பாஸ்கர் போன்ற எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலே! இதற்கு விடை திரைபடத்தின் பெயருக்கு பின்னால் வருடத்தை அடைப்புக் குறியில் அடைப்பதே!

(Quiz கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால் award என்ற கடவுச்சொல்லை (Password) இங்கே இடவும்)