நடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்…
ஜூலை 31, 2010 7 மறுமொழிகள்
ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாக…..
![]()
சிவாஜி பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !
–கவியரசு கண்ணதாசன்

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பக்கம்: சிவாஜி பற்றி வைரமுத்து
மனதுக்குப் பிடித்தவர்கள் இரண்டு பேர் படங்களும் போட்டு கவிஞர் நடிகர்திலகத்தைப் பற்றி எழுதிய கவிதை வரிகள் எடுத்துப் போட்டு அசத்திட்டீங்க..
பகிர்வு மிக மகிழ்வு.
வெற்றிவேல்/கருணாகரசு,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம். ஆனால் திருமண ஃபோட்டோ பிரமாதமாக இருக்கிறது!
/**
இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
**/
அருமையான வரிகள்.
இந்த மாதிரி அறிய தகவல்களை
பற்றி அடிக்கடி எழுதுங்கள்.
நன்றி
- விமல்
நிச்சயமாக விமல். நன்றி.
சுஜாதா பதில்கள்….
சேஷாத்ரி.
பல முறை வைரமுத்துவைச் சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள். ஆனால் கண்ணதாசனைப் பற்றி எழுதுவதில்லை. கண்ணதாசனை விட வைரமுத்து சிறந்த கவிஞரா ?
இல்லை .