நடிகை சுஜாதா மறைவு



சுஜாதா எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிக்கவும் தெரியும், பார்க்க லட்சணமாகவும் இருப்பார். 58 வயதில் அவர் மறைந்தது அதிர்ச்சியைத் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் condolences .

மயங்குகிறாள் ஒரு மாது (1975)


By E. Gopal

படம் வெளியான தேதி: 30.5.1975,

நடிகர்கள் : முத்துராமன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை நடிகைகள்: சுஜாதா, ஃபடாபட் ஜயலக்ஷ்மி, எம்.என்.ராஜம், காந்திமதி, புஷ்பா பின்னணி பாயிருப்பவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜயராம் பின்னணி இசை: விஜய பாஸ்கர் பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், தயாரிப்பு: பாஸ்கர்
வசனம்: பஞ்சுஅருணாசலம்
திரைக்கதை, வசனம், இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்

மாத்திரையடக்க கதை

மனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”.

கதைச்சுருக்கம்

கல்லூரியில் படித்துக்கொண்டு, தங்கும் விடுதியில் பெண்தோழிகளுடன் தங்கியிருக்கிறார் சுஜாதா.  இவரின் அறைநண்பியான ஃபடாபட் ஜயலட்சுமி மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறார். படிக்கற காலத்தில் படிக்க வேண்டும், மற்ற சஞ்சலங்களில் மனதைச்செலுத்தி விடக்கூடாதென்று நினைக்கிறார். இக்கருத்தை உடைக்க முற்பட்டு சுஜாதாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறார்கள் தோழிகள். உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களைக் கொடுத்தும், திரைப்படத்திற்கு திருட்டுத்தனமாக கூட்டிப்போயும் அவர் மனதில் பாதையைப்போடுகிறார்கள். இதனால் ஏற்படும் கருத்துவேறுபாடில் சுஜாதாவை, ஃபடாபட் அடித்துவிட, இருவருக்கும் மனதில் பிளவு ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று போகிறது. பருவக்கோளாறினால் ஏற்படும் மயக்கம் ஒருபுறம் தள்ள, உடம்பு என்ற நெருப்பு மனதை வினாடியில் சாம்பலாக்க, காதல் என்ற பல்லக்கு பயணிக்கத்தொடங்குகிறது.

விஜயகுமாரின் அப்பா (செந்தாமரை) ஒரு  பெண் சபலஸ்தர், பணக்காரர்.  இவர் பெண்கள் கூட குஜாலாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுகிறார் புகைப்படக்கலைஞரும் எப்படியும் பணத்தை சம்பாதிக்கத்துடிக்கும் தேங்காய் சீனிவாசன். விஜயகுமார் தேங்காயின் மகன், சுஜாதாவின்மேல் காதல்வயப்பட்டு அவர் பின்னால் சுற்றுகிறார்.  ஆரம்பத்தில் நிராகரிக்கும் சுஜாதா, இன்னபிற பருவக்கோளாறுகளும் சேர்த்து உந்த, விரித்த வலையில் சிக்குகிறார்.  விஜயகுமாரின் பங்களாக்கு போகும் ஒருமுறை தன்னை மறந்த நிலையில் இருவரும் தவறு செய்ய, பேயரைந்தவர்போல் விடுதிக்கு வருகிறார்.  வருத்தம் தெரிவிக்கும் விஜயகுமார், கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவரின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வர, சந்தேகிக்கிறார் ஃபடாபட்.  மறுநாளிலிருந்து விஜயகுமாரை காணாமல் தேட, ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அவரின் இருப்பிட்த்திற்கே போக, அங்கோ, காவலர்கள் அவரையும், அவர் அப்பாவையும் கடத்தல் காரணமாக கைது பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரே வழி, விஷம் குடிப்பதுதான் என்று முடிவு செய்து – அதையும் செய்கிறார். இவர் மயங்கி விழ, ஃபடாபட் ஓடிப்போய் விடுதியின் மருத்துவரான எம்.என்.ராஜத்தை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார்.  இவரின் விஷத்தை குடலிலிருந்து எடுத்த மருத்துவர், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உள் இறங்கிய விஷம் அதை முறித்துவிட்டது என்றும் – இவ்விஷயம் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அதனால் சுஜாதாவின் வருங்காலம் பாதிக்கப்படலாம் என்றும் ஃபடாபட்டிடம் உறுதி வாங்கிக்கொள்கிறார். ஒருமுறை ஒன்றுகூடிய உடன் கர்ப்பமாகத்தான் வேண்டும், புற்று நோய் வந்தால் சாகத்தான் வேண்டும், இரண்டு மனைவி இருந்தால் ஒரு மனைவி சாகத்தான் வேண்டும் (அ) அப்புறம் போய்விடவேண்டும், வில்லன் கடைசி காட்சிகளில் இறக்கத்தான் வேண்டும், கடத்தல்காரன் பணத்தை சுருட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு கப்பலில் (இதில் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் வேறு
இருக்கும்) தப்பிக்க ஒரு அதிரடி திட்டம் இருக்கத்தான் வேண்டும், மனைவியை விட்டு ஓடிவிட்டால், கடைசி காட்சியில் சேரும்போது மனைவி கணவன் காலில் விழத்தான் வேண்டும் – இது போன்ற மாற்றமுடியாத, மாற்ற விரும்பும் ஆனால் மாற்றக்கூடாதென்ற ஊறிப்போன தமிழ்பட தலைவிதிகள் இதிலும் உண்டு.

அவர் நலனையே கருதும், ஃபடாபட், எல்லாவற்றையும் மறக்க ஆதரவளித்து, கல்லூரி நாட்கள் முடிந்தவுடன் பிரிந்து செல்கிறார்கள்.  சுஜாதாவின் தந்தையான அசோகன், தன் மனைவி உயிருடன் இல்லாத காரணத்தினால், அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்க முற்படுகிறார். முத்துராமனும் அவர் அக்காவும் பெண்பார்க்க வருகிறார்கள்.

அவர் அக்காவாக வரும் எம்.என்.ராஜத்தை கண்டு அதிரிச்சியை உள்வாங்கும் நாயகி, தனியே அவரை கூட்டிப்போய், இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துமாறு மன்றாடுகிறார்.  “வாழ்க்கையில் அப்படிப்பார்த்தால் யாரும் உயிருடனே இருக்க முடியாது” என்று வாதிடும் ராஜம், அவரின் குணத்திற்குத்தான் பண்ணிக்கொள்வதாகவும், நடத்தையை பார்த்து அல்ல என்றும், தனக்கு இதில் பரிபூரண சம்மதம் என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறார்.  முதல் இரவில், முத்துராமனும், தனக்கும் ஒரு காதலி இருந்த்தாகவும், கல்யாணம் கைகூடவில்லை என்றும் கூற, சற்று ஆறுதலடைகிறார்.

இதற்க்குப்பின், இனிமையாக பயணம் செய்யும் வாழ்க்கை, ஒரு குழந்தை பிறந்து வளர, திடீரென்று புடவைக்கடையில் ஃபடாபட்டை சந்திக்கும் போது பாதை மாறுகிறது.  அவரின் கணவர்தான் தேங்காய்.  ஏற்கனவே இருவரின் மனைவியும் நண்பிகளாதலால், குடும்ப நண்பர்கள் ஆகிறார்கள்.  ஒரு நாள் தேங்காய், தனிமையில் இருக்கும் சுஜாதாவிடம் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொடுக்க, அதை பார்த்துக்கொண்டு வரும் நாயகிக்கு – அவரும், விஜயகுமாரும் கூடியபோது எடுக்கப்பட்டபடங்களையும் இடைச்செருகல் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தேங்காய், ஒரு பெரிய பணமுடிப்பு கொடுத்தால் இதன் மூலச்சுருளை கொடுத்துவிடுவதாகவும், அப்பணமுடிப்பை எப்படி அவர் கணவர் செய்யும் தொழிலிலிருந்து அவர் அறியாமல் எடுக்கக் முடியும் என்ற லாவகத்தை  கற்றுக்கொடுப்பதாகவும் கூறி, அவகாசமும் கொடுத்துச்செல்கிறார்.

இவ்வதிரிச்சியிலிருந்து மீள்வதற்குள், மாலை, அவர் கணவரோ, புதிதாக ஒரு ஓட்டுனரை நியமித் திருப்பதாகக்கூறி விஜயகுமாரை கொண்டு நிறுத்துகிறார்.
கள் குடித்த குரங்காக தலை சுற்றுகிறது நாயகிக்கு.

இச்சுழலிலிருந்து அவர் எப்படி மீண்டார், தேங்காயை எப்படி சமாளித்தார், முன்னாள் காதலனை எப்படி தவிர்த்தார், கணவனுக்கு குட்டு வெளிப்பட்ட்தா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

மொத்தக்கருத்து

ஆரம்பம்முதலே கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படமோ என்று நினைக்கத்தோன்றும் காட்சிகள் வேகவேகமாக மாறி குடும்பத்துக்குள் புகுந்து சுவை கூட்டுகிறது.  திரைக்கதையை நம் கலாசாரக் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.  பிற்பாதியில் ஒருவித சோர்வு ஏற்பட்டு, கதை இப்படித்தான் பயணிக்கும் என்று தோன்றிவிடுவது எதிர்பாராத திருப்பங்களை மனதில் ஏற்படுத்த வில்லை.  ஆனாலும்,  சிறு சிறு பாத்திரங்கள் மூலம் எல்லோருடைய படைப்பும் நிறைவைத்தருகிறது.  ஆரம்பக் காட்சிகளில் புஷ்பாவின் உடையலங்காரம் அப்போதிருந்த நாகரீகத்தை காட்டுவதாக இருந்தாலும், கல்லூரி இளைஞர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு எடுத்திருப்பது தெரிகிறது.

நடிகர்கள்

ஃபடாபட் ஜயலட்சுமி, எம்.என்.ராஜம், தேங்காய், முத்துராமன், விஜயகுமார் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே தேய்த்திருக்கிறார்கள். சுஜாதாவிற்கு நிறைவான பாத்திரம்.
நன்றாகச்செய்துள்ளார். ஃபடாபட்டின் பாத்திரம் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சமூகச்சங்கிலிகளை அறுப்பதாக இருந்தது. இங்கு அதற்கு நேர்மார். எக்காரணம் கொண்டும் ஊறிவிட்ட கோட்பாடுகளை அறுக்கக்கூடாதென்று கூறும் பாத்திரம்.
சுஜாதாவின் உற்ற தோழியாகவும், அவரை காட்டிக்கொடுக்கூடாதென்று நினைக்கும் உன்னதமான பாத்திரத்தில் மிளிர்கிறார். விஜயகுமார் அமைதியாக வந்து போகிறார். தேங்காய்க்கு என்னவோ வில்லத்தனம் அவ்வளவாக இப்படத்தில் பொருந்தவில்லை. ஃபடாபட் தன்னை மாய்த்துக்கொள்வதாக கூறுவது, பின் தேங்காய் திருந்துவது எல்லாம் தமிழ்படத்திற்கென்று காலில் போட்ட சங்கிலிகள்.
செந்தாமரையும், அசோகனும் வந்து போகிறார்கள்.  சிறு பாதிரங்கள் நிறைவாகச்செய்திருக்கிறார்கள்.

இசை

இசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். விஜயபாஸ்கர் அவர்களின் இசை மிகவும் மெச்சத்தகுந்த வகையில் போடப்பட்டிருக்கிறது.  “சுகம் ஆயிரம்”, “வரவேண்டும் வாழ்க்கையில்”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன், ஒருபுறம் நாகம்” போன்ற இன்றும் பிரபலமாக உள்ள பாடல்களை தன் இனிய இசை மூலம் அள்ளித்தெளித்திருக்கிறார். இவர் ஒரு கன்னட இசையமைப்பாளர், இருப்பினும், ஹிந்தி, மற்றும் எல்லா தெற்கு மாநில மொழிகளிலும் இசைகோர்த்திருக்கிறார். இவரின் இசை எனக்குப்பிடித்தமான ஒன்று.  பல அதிரடி வெற்றி இசை கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.வி. என்ற புயல் காற்றில் அவ்வளவாக அறியப்படாதவர், இருப்பினும் அற்புதமான இசை வித்தகர்.  சில ஆண்டுகளுக்கு முன்தான் காலமானார். இவரின் மற்ற சில படங்கள்:
தெய்வக்குழந்தை (முதல்படம்), தப்புத்தாளங்கள், ஆடுபுலிஆட்டம், உங்கள் விருப்பம், சௌந்தர்யமே வருக வருக, எங்கம்மா சபதம், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, பேர் சொல்ல ஒரு பிள்ளை.

பஞ்சுஅருணாசலத்தின் வசனங்களும் கூர்மை, கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் இதம் சேர்ப்பவை.  பஞ்சு அருணாசலமும் பாட்டெழுகியிருக்கிறார்.  பாபுவின் புகைப்பட காட்சிகள் மனதை கொள்ளைகொள்வதோடு, புதுக்கோணப் பரிமாணங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு படம் கொடுதிருக்கிறார்.

இப்படம் வந்து ஓடியதா என்று தெரியவில்லை, நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிவந்து, படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப்பின் 25 வருடம் கழித்து இப்போதுதான் பார்த்தேன்.

பாட்டிற்காகவும், அறுவையாக இல்லாத திரைக்கதைக்காகவும் நீங்கள் பார்க்கலாமே! இப்படத்தின் பிரதி இப்போது இந்தியாவில், சென்னையில், சங்கரா ஹாலில் கிடைக்கிறது. முதலில் கிடைக்காமல்  நானும் அசோக்கும் சிரமப்பட்டுத் தேடி எடுத்தோம்.

எந்திரன்


எந்திரன் படத்துக்கு நண்பர் கோபால் எழுதி இருக்கும் மினி விமர்சனம். கோபால் துபாயில் வாழ்பவர், அங்கே இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே படம் வந்துவிட்டது போலிருக்கிறது. ஓவர் டு கோபால்!

We had managed to secure ticket for Rajinikanth’s blockbuster movie ENTHIRAN, we three (myself, ashok, ramki) went to Galleria theatre for the morning first show 7.30 a.m.

When we reached the theatre at 7 am, there was already surging crowd jostling to grab space to make entry. I remember my childhood days, when we were forcibly woke up by our parents to go to temple at the dawn, we were reluctant, obstinate, unyielding, refused to wake up. But now, we woke up early in the morning, well prepared, bruiced and went in time.

Being a working day in Dubai, I thought people won’t make it. I think the crazy people, including us, looked as if nothing would compensate Superstar’s movie and ready to keep our job at the altar for a decent sacrifice. The craziness crept into our brain also because we wanted to see this movie before it is released in India on Friday.

We entered the theatre with a big rapturous noise, sat in the saddle amidst chaos and vivid fans’ thunderous ‘silence’. Fans did not heed to the instructions of torchlight-guides who were out to help. Unlike old days, there was no Government documentary showing or advertisement. We were at the edges of seats and biting nails impatiently, cursing the Operator. We did not even have such a tension and excitement during school result days.

Finally the blockbuster began.

Initial rhetoric of usual Rajini introduction scene is not there, instead he is introduced in the opening scene as Dr. Vaseegaran who finds to enthuse a Robotic object into human, he creates this robot with all that a man can do and cannot do. He finally succeeds after 10 years of research, but he fails in the test by experts as it cannot have any feelings of love, compassion, attachment or obeying attitudes. He re-implants all this and gets interrupted by Danny who is jealous. Rest you have have to see in theatre and i am not going to tell you the story to remove your interest.

HIGHLIGHTS:
Shankar has used technology and special effects to the core.
Aish looking great, acted well, she looks old in some scenes.
Rajini is just GREAT GREAT GREAT
He takes more |Avatars, say more than 1000 and Dasavatharam is a mustard here.
I think none other than Rajini can mantle this role and none would fit into this role.
Excellent camera and fighting scenes, superb train stunt by Chitti
Music is good and background music is pressed to take the scenes to the new heights.
Dont miss to take your children, 4-14, they will enjoy more than you.
Chitti (rajini villain)’s actions are superb,
A repeat watch may be recommended.
Songs picturisation just superb
computer, graphics, tehno – all class
Razor edge dialogues by Sujatha – just great
Karunas, Santhanam – a waste in the film, they have less role to play.
We must salute Shankar for this great movie in Tamil. We may have seen many movies in hollywood, but to bring hollywood to kollywood – one shoudl have guts, i think he has achieved this coveted goal.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

அன்னக்கிளி – விகடன் விமர்சனம்


இதை விமல் ஸ்கான் செய்து அனுப்பி இருக்கிறார், அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

இளையராஜாவின் முதல் படமான இதில் அவரது இசையை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த விமர்சனத்தில் இல்லாதது ஏன் என்று விமல் வியக்கிறார். நானும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

விமர்சனம் என்றால் இப்படி!


எனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.

முதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்!

இரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா? படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.

இரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

உப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.

  • பாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்!
  • சாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்? (என்ன படம் தெரியவில்லையே?)
  • குமுதத்தில் அரசு பதில் பகுதியில்:
    கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
    பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

    (எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)
  • நடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி!
  • லிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.
  • டோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.

    கொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்!

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்:
    டோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்
    உப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு

    தன் கதைகள் படமானதைப் பற்றி சுஜாதா


    சுஜாதா

    சுஜாதா

    நண்பர் ஸ்ரீனிவாஸ் சுஜாதா பதிவாக போட்டுத் தாக்குகிறார். என் பங்குக்கு நானும் ஒன்று. நண்பர் வெங்கட்ரமணன் அனுப்பிய ஒரு மறுமொழியை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். நன்றி, வெங்கட்!

    பஞ்சு அருணாச்சலம் பற்றி தன் பார்வை-360 பதிவில் சுஜாதா:

    சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம். அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.

    30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து ‘சிவாஜி’யில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினைவிலிருக்கிறதை அறிந்தேன்.

    ‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

    ‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

    ‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.
    ……
    பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

    பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

    ‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.

    இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

    கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

    ‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

    தொடர்புடைய பக்கங்கள்:
    காயத்ரி திரைப்படம்
    கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
    சுஜாதா சொன்ன சில, சுஜாதாவைப் பற்றி சொல்லப்பட்டவை சில – தொகுப்பு

    அவர்கள் (Avargal)


    avargal

    1977ல் வந்தது.

    அவர்கள் மூன்று ஆண்கள், ஒரு பெண். ஆண்கள் – ரஜினி காந்த், ரவிகுமார், கமல்ஹாசன். பெண் – சுஜாதா.மூவரும் சுஜாதாவுடன் தொடர்புடையவர்கள். ரஜினிகாந்த் சாடிஸ மனப்போக்குடைய மாஜிக் கணவன். ரவிகுமார் மென்மையான மனப்போக்கு கொண்ட மாஜிக் காதலன். கமல் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் கேரள “அசடு”.

    வீட்டில் மனைவிடம் குத்தல், குதர்க்க வார்த்தைகள், மற்றும் சுடுசொற்கள் பேசும் ஈவிறக்கமற்ற கே.ராமனாதன் (ரஜினி), பம்பாய் அலுவலகத்தின் ஏரியா மானேஜர். அவர் திருமணம் செய்வது மனைவியை கொடுமைப்படுத்தவே என்பது போல் சித்தரிப்பது சிறிது உதைக்கிறது. ஏற்கனவே ஒருவரை நேசித்தபெண் என்று தெரிந்தே அனுபாமாவை திருமணம் செய்துகொள்கிறார்.பின் ஏன் கொடுமைப்படுத்துகிறார் என்பது பாலசந்தருக்கே வெளிச்சம். ரஜனி வழக்கமான ஸ்டைலுடன் அசத்துகிறார். வில்லன் ரோல், காமடி ரோல் இவை இரண்டிலும் ரஜினி சோடை போனதில்லை. இதிலும் அப்படித்தான். கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பை மிக அற்புதமாக வரவழைத்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு. (என் மனைவிக்கு மிஸ்டர். ராமனாதன் மேல் வந்த ஆத்திரத்தைப் பார்த்து அதை ஊர்ஜிடப்படுத்த முடிந்தது.) சட்டரீதியாக விவாகரத்து பெற்று, மன ரீதியாக ஜீவனாம்ஸமும் வேண்டாம் என்று அனு கூறிவிட, ராமனாதன் சந்தோஷமாக தன் வழியே போவதை விட்டு விட்டு தன் ஜென்மத்தின் தலையாய குறிக்கோள் அனுவை மாஜிக் காதலனுடன் சேர விடாமல் இருப்பதே என்று கங்கனம் கட்டுவது திரைக்கதையில் பெரிய ஓட்டை.

    பரணியை (ரவிக்குமார்) ஏதோ வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. பாவமான முகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஜெண்டில்மேன் ஆக வந்து போகிறார். அவர் முக்கிய கேள்விகளுக்கு சிம்பாலிக்காகவே பதில் சொல்வதில் (டெலிபோன் மூலமாக, அனுவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்பதை ஷேவ் செய்து கொண்டு வருவது மூலம் சொல்வது)பாலசந்தருக்கே உரித்தான டச் தெரிகிறது. மாஜிக் கணவன் மீண்டும் வரும் பொழுது தான் ஒதுங்கிக் கொள்வது பரணிக் கேரக்டருக்கு மேலும் மெருகு சேர்க்கிறது. புல்லாங்குழல் ஊதும் பொழுது ஒருவித போஸில் நிற்பது கொடுமையாக இருக்கிறது. பிங் பாங் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது இவர் நிஜமாகவே இது நிறைய விளையாடியிருப்பார் என்று தோன்றுகிறது. அருமையான் ஸ்மாஷ் ஸ்டைல்கள். எதிரில் ரஜினி கொடுமையாக விளையாடிக் கொண்டிருப்பார்.

    ஜனார்த்தன் – சுருக்கமாக ஜானி சீனியர் – கமல்; ஜானி ஜூனியர் – கமலின் பொம்மையும், வெண்டிரிலோக்விஸமும். ஜானி ஜூனியர் பாலசந்தர் முத்திரை. சீனியர் எப்படா அனு மெட்ராஸ் வருவார் என்று காத்திருந்தவர் போல் உதவுகிறார். மனைவியை ஸ்டவ் பலியாக்கியது முதல் கும்மிடி அடுப்பு தான் உபயோகப்படுத்துவதாக கூறுகிறார். சொதப்பல். திருவனந்தபுரம் புறப்படும் அனுவிடம் தன் காதலுக்கு சாதகமாக பதில் வந்துவிடாதா என்று கடைசிவரை ட்ரெயின் ஜன்னலில் தோன்றி தோன்றி மறைவது அருமையான சீன். அழுத்தக்கார அனு பதிலே பேசாமல் ஏமாற்றிவிடுகிறார். ஆனால் மிகவும் பிராக்டிகல். ஜூனியர் மூலமாக தன் காதலை வெளிப்படுத்தியும் திரைக்கதையின் வசதிக்காக அனு புரிந்துகொள்ளாமல் இருந்துவிடுவது பரணியுடன் மறைமுகமாகவே அதாவது சிம்பாலிக்காகவே சம்பாஷனை செய்யும் அனு காரக்டருக்கு பொருந்தவில்லை. அப்பாவி ஜானி சீனியர் ரோலில் கமல் அலட்சியமாக ஜமாய்த்திருக்கிறார்.

    அனுபாமா (சுஜாதா) மிகுந்த புத்திசாலியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். பின் உண்மையில் ஒரு முட்டாள் பெண் என்று ராமனாதனின் அம்மா எல்லோருக்கும் புரிய (?) வைத்துவிடுகிறார். முற்போக்கிற்கும், பாரம்பரியத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு முட்டாள் என்ற பெயர் பொருத்தம் நியாயம் அளிக்காது. எதற்க்கும் அழாத அனு கடைசியில் தன் சுகங்களை துறந்து தன்னுடன் திருவனந்தபுரம் கிளம்பிவிடும் மாமியாரின் மேன்மையான, மென்மையான குணத்த்திற்கு அணையை உடைத்து விடுகிறார்.

    ராமனாதனின் அம்மா – (யாரிவர்? – லீலாவதி என்று பெயர் பார்த்தேன்)  குற்ற உணர்ச்சி மிக்க மாமியார். மகன் செய்யும் கொடுமைகளுக்கு இவர் வேலைக்கார ஆயாவாக வந்து பிராயசித்தம் செய்துகொள்கிறார். பாத்திரம் கற்பனைக்கு நன்றாக இருக்கிறது.பெண்களை நிச்சயம் கவரும். ஆமாம். எல்லாருக்கும் தலை சிறந்த மாமியார் கிடைப்பது என்பது கற்பனையுடன் நின்று விடுகிறது.

    கே.பாலச்சந்தரின் டிலெம்மா இதுவே. சட்டபூர்வமாக விவாக ரத்து ஆன பெண், மத பூர்வமாக திருமணத்தின் போது கணவனால் கட்டப்பட்ட தாலியை என்ன செய்யவேண்டும்? போனால் போகட்டும் என்று கழுத்திலேயே விட்டுவிடுவதா? மறுமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்குமே? கடைசியில் கோவில் உண்டியலில் விடைப் பெற்றுவிடுகிறார்.

    ”இப்படிஓர் தாலாட்டு”, ”ஜூனியர் ஜூனியர், இரு மனம்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது.  அனைத்துப் பாடல்களையும் SPB, S.ஜானகி மட்டுமே பாடியிருக்கிறார்கள்.  M.S. விஸ்வனாதன் இசை.

    பாலச்சந்தர் கிளாசிக்.

    10க்கு 6.

    Indie தமிழ் படங்கள்?


    இன்று டாப் டென் தளத்தில் தமிழில் Indie படங்கள் என்று ஒரு போஸ்டை பார்த்தேன். தமிழில் Indie படங்களா என்று ஒரு நிமிஷம் அதிசயப்பட்டேன். சோகம் என்னவென்றால் இதில் நான் அந்த நாளைத் தவிர வேறு படங்கள் பார்த்ததில்லை. அந்த நாள் ஏவிஎம் தயாரிப்பு – அதை எப்படி Indie படம் என்று சொல்கிறாரோ தெரியவில்லை. லிஸ்ட் சவுகரியத்துக்காக கீழே தரப்பட்டிருக்கிறது. படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

    எஸ் பாலச்சந்தர் – அந்த நாள் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. என் விமரிசனம், சாரதாவின் விமர்சனம், படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் எண்ணங்கள்

    கம்யூனிஸ்ட் தோழர்கள் – பாதை தெரியுது பார் பார்க்க வேண்டும் என்று ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ. சிட்டுக்குருவி பாடுது என்ற அருமையான பாட்டு உண்டு.

    ஜெயகாந்தன் – உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புது செருப்புக் கடிக்கும் எல்லாவற்றையும் பார்க்க ஆசைதான். யாருக்காக அழுதான் சில சீன்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். பக்ஸ் புரியவில்லை என்று சொல்லி இருந்தான்.

    சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் – திக்கற்ற பார்வதி லட்சுமி, ஸ்ரீகாந்த் நடித்தது. ராஜாஜியின் கதை. படித்திருக்கிறேன். எனக்கு கதை அவ்வளவு சுவாரசியப்படவில்லை.

    ஜான் ஆபிரகாம் – அக்ரஹாரத்தில் கழுதை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

    ஜுபிட்டர் சின்னதுரை – அரும்புகள் கேள்விப்பட்டது கூட இல்லை.

    ஜெயபாரதி – குடிசை கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ அவார்ட் கூட வாங்கியது என்று நினைவு.

    நிமல் கோஷ் – சூறாவளி கேள்விப்பட்டது கூட இல்லை.

    மௌலி – இவர்கள் வித்தியாசமானவர்கள் நான் படிக்கும் காலத்தில் வந்த படம். அப்போது பார்க்க முடியவில்லை.

    கோமல் சுவாமிநாதன் – ஒரு இந்தியக் கனவு & அனல் காற்று ஒரு இந்திய கனவு கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அனல் காற்று கேள்விப்பட்டது கூட இல்லை.

    சந்திரன் – ஹேமாவின் காதலர்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். க்ளப் டான்ஸ் புகழ் அனுராதாதான் ஹீரோயின்.

    துரை – ஒரு மனிதன், ஒரு மனைவி கேள்விப்பட்டது கூட இல்லை.

    அருண்மொழி – காணிநிலம் கேள்விப்பட்டது கூட இல்லை.

    பாபு நந்தன்கோடு – தாகம் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் என்று கேள்வி. அவ்வளவுதான் தெரியும்.

    Parallel சினிமா என்றால் தண்ணீர் தண்ணீர், பசி, அவள் அப்படித்தான், உணர்ச்சிகள், கமல் சுஜாதா இருவரும் செவிட்டு ஊமைகளாக நடிக்கும் ஒரு படம் (ஹிந்தியில் கோஷிஷ்) – ஆஹா, பேர் ஞாபகம் வந்துவிட்டது! உயர்ந்தவர்கள்! – இதெல்லாம் ஏன் விடப்பட்டது என்று தெரியவில்லை.

    சுஜாதாவும் சினிமாவும்


    நண்பர் வெங்கட் எழுதிய மறுமொழியை இங்கே பதிப்பித்திருக்கிறேன். நன்றி, வெங்கட்!

    பஞ்சு அருணாச்சலம் பற்றி தன் பார்வை-360 பதிவில் சுஜாதா:

    ….சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.

    30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து ‘சிவாஜி’யில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினைவிலிருக்கிறதை அறிந்தேன்.

    ‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பலநாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

    ‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

    ‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.
    ……
    பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் farewell to arms, for whom the bell tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

    பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

    ‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.

    இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

    கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பலமாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

    ‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போதுகூட இதன் பின்கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

    காயத்ரி (Gayatri)


    காயத்ரி பற்றி சுஜாதாவும் பஞ்சு அருணாசலமும் சொன்னது – இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் வசந்த் கதைகள் ப்ளாகிலிருந்து இங்கே மீண்டும் பதிப்பித்திருக்கிறேன்.

    குமுதத்தில் “சுஜாதாவின் கதை” என்ற தொடரிலிருந்து:

    “சுஜாதாவின் நாவல்களில் முதலில் படமாகியது காயத்ரி. பஞ்சு அருணாசலம்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார்.

    “தினமணி கதிரில் `காயத்ரி’ தொடராய் வரும்போதே அதை திரைப்படமா எடுக்கணும்னு நினைச்சேன். தொடர் முடிஞ்சதும் சுஜாதாவைபாம்குரோவ் ஓட்டல் ரூம்ல சந்திச்சேன். ரொம்ப எளிமையா பழகுனார். பெரிய எழுத்தாளர்களுக்கு இருக்கும் பந்தா எதுவும் இல்ல. எல்லாத்தையும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டார். அப்போ அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. அவரோட ஆர்வம் என்னை ரொம்ப கவர்ந்தது” என்று, தான் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

    “படம் வெளில வந்தபிறகு அந்தப் படத்தில் அவருக்கு அத்தனை திருப்தியில்லை. சினிமா திரைக்கதைக்காக சிலவற்றை மாற்றியிருந்தோம். அதைச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். கதையாய் எழுதுவது வேறு. அதை சினிமாவுக்காக மாற்றுவது வேறு என்பதை உணர்ந்துகொண்டார்” என்கிறார் பஞ்சு அருணாசலம்.

    சுஜாதாவும் `காயத்ரி’ கதைக்கு சினிமாவில் நடந்த சேதாரங்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த முதல் பட அனுபவத்திலேயே சினிமாவின் சூட்சுமங்கள் அவருக்கு பிடிபட்டுவிட்டது.

    “எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் `ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னை தயார்படுத்தியது” என்று சமீபத்தில் குமுதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சுஜாதா.