கொடி மலர்


1966ல் ஸ்ரீதர் டைரக்‌ஷனில் வந்த திரைப்படம்.  கதை மாந்தர்களைக் காட்டிலும் கதையை நம்பி எடுக்கப்பட்டத் திரைப்படம். ஸ்ரீதர் பொதுவாகவே அப்படித்தானே. அவருடைய அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் சில திரைப்படங்கள் இந்த இலக்கணத்தைப் பின்பற்றாமல் போனாலும்  அதற்கு முன்னர் வந்த திரைப்படங்களின் தரத்தை நாம் எப்படி சீர்தூக்கிப் பார்த்தாலும் சோடை போனதில்லை. கொடி மலர் அப்படிபட்ட தரமான ஒரு திரைப்படம்.

பிரபல நடிகர்கள் – முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ்

பிரபல நடிகைகள் – காஞ்சனா, விஜயகுமாரி, எஸ்.என். பார்வதி, (முத்துராமனின் தாய் காரக்டரரில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் முக்கிய ரோல். பிற்சேர்க்கை – எம்.வி.ராஜம்மா  – நன்றி அப்துல்)

இசை – எம்.எஸ்.விஸ்வனாதன் பாடல்கள் – கண்ணதாசன்

டைரக்‌ஷன் – C.V.ஸ்ரீதர்

சமூக மாற்றத்தின் விளம்பில் அகப்பட்டுக்கொள்ளும் குடும்பங்கள் எது சரி, எது தவறு, ஏற்றுக் கொள்வதா, ஏற்க மறுக்கவேண்டுமா என்று தடுமாறுகிறார்கள். குடுமபத்தில் சிலர் மற்றங்களை ஏற்றுக் கொள்வதும், சிலர் ஏற்க மறுப்பதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சனையை படம் பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியை கொடிமலிர்ல் ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

முத்துராமன் அண்ணன். ஏவிஎம் ராஜன் தம்பி. இருவரும் இரு துருவங்கள். ஏவிஎம் ராஜன் கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ”மாற்றம்” எனும் முன்னேற்றக் கொள்கைகளுடன் நுழைகிறார். பழமைவாதங்களில் மூழ்கியிருக்கும் தாயுடன் போராட்டம் துவங்குகிறது. மிகுந்த வசதி படைத்தவர்களாயினும் இளைய மகனின் மோட்டார் சைக்கிளையே தேவையற்ற ஒரு பொருளாக கருதுகிறார் தாய். அனாவசிய பண விரயம் என்று கருதுகிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் மகன் த்ன்னிச்சையாக செயல்படுவதும் மரபிலிருந்து விலகிச்செல்வதும் தாய்க்கு ஒரு சுமையாகத் தெரிகிறது.  மகனோ தாயிடம் மரியாதையாகவும், அன்புடன் இருக்கவேண்டும், ஆனால் தன் வாழ்க்கை தனது, அதில் முடிவுகள் தனதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார். இதனால் மகனுக்கும் தாய்க்கும் இடைவெளி பெரிதாக உருவாகிவிடுகிறது. அதனால் தாயும் இளைய மகன் நம் கை அடக்கத்தில் இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் இருப்பதால் அவன் வழியில் குறுக்கிடாமலும், மகன் சற்றே ஓங்கிப் பேசினால் பயந்து விடுவதும் இயல்ப்பாகிப் போகிறது.

மூத்த மகன் முத்துராமன். மூத்த மகன் இன்னொரு துருவம். அம்மா மேல் பக்தியே வைத்திருக்கிறார். அம்மா சிறிது மனம் கோணல் அடந்தாலும் துடித்து விடுகிறார். அம்மாவுக்கும் மகன் கையடக்கமாக இருப்பதில் பரம திருப்தி. தம்பியை பல முறை அம்மாவுக்காக கண்டித்தாலும், தம்பியின் மேலும் மிக பாசமாக உள்ளவர். தமபியைப் போல் அல்லாம்ல் மாமாவிடமும் மிகுந்த மரியாதையுடையவர். வீட்டிலேயே வளர்ந்து அம்மா வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக அம்மாவின் நிழலாக இருப்பவர்.

தாய் மாமா நாகேஷ். அவருக்கு அக்காவை விட்டால் பூவாவுக்கு வழியில்லை. இடமும் கிடையாது. அக்காவை காக்கா பிடித்துக் கொண்டும், அக்கா கொடுக்கும் இடத்தினால் கணக்கராக இருந்து வீட்டிலும், வயலிலும் எல்லோரையும் வேலை வாங்குவதும், அக்கா மகன்களையும், அக்காவையுமே தன் சொந்தங்களாகவும் கொண்டிருக்கிறார். தன் பாச்சா இளைய மகனிடம் பலிக்காவிட்டாலும் துணிச்சலாக அக்காவுக்காக பரிந்து இளைய மகனிடம் மோதிக் கொண்டு காலம் தள்ளுகிறார்.

பைக்கில் கிராம்ங்களை வலம் வருகையில் இயற்க்கையிலேயே துணிச்சலான காஞ்சனாவை சந்திக்கிறார் இளைய மகன். காதல் மலர்கிறது. விஜயகுமாரி காஞ்சனாவின் அக்கா. ஊமைப்பெண். இவர்கள் தந்தை பரம் ஏழை. தாய் எஸ்.என்.பார்வதி. ஊமையானாதால் மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் வெதும்புகிறார் தந்தை. ஊமைப் பெண்ணை தன் அசட்டு மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார் பஞ்சாயத்து தலைவர்.  காஞ்சனாவின் துணிச்சலாலும், மதி நுட்பத்தாலும் குடுமபம் ஒருவாறு தாக்குப்பிடிக்கிறது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகாது என்று நினைத்து இளைய மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராகிறார்கள் பெற்றோர்கள்.

முத்துராமனுக்கு மனம் செய்ய தாய் தயாராகிறார். திருமணம் நடை பெறவிருக்கும் சமயத்தில் தாய் உடல் நலம் குன்றுகிறது. அதனால் தாய் மாமா தலைமையில் சகோதரர் இருவரும் செல்கிறார்கள். மனப்பெண் காஞ்சனா. அதே முகூர்த்தத்தில் விஜயகுமாரி பஞ்சாயத்து தலைவரின் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் அசட்டு மகனுக்கு மணம் செய்யத் தயாராகிறார்கள். ஏவிஎம் ராஜனும் காஞ்சனாவும் பரிதவிக்கிறார்கள்.

இந்த இடத்தில் சினிமாத்தனம் புகுந்து விடுகிறது. விஜயகுமரி கிணத்தில் குதிக்க முத்துராமன் காப்பாற்ற பெருந்தன்மையுடம் ஊமைப்பெண்ணை மனம் செய்து கொள்கிறார். அனால் தாய் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்க்கு எதிராகப் பேசி பழக்கமில்லாத மகன் விஜயகுமாரியை அவர் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார் மகன்.

அதன் பிறகு ஏவிஎம் ராஜன் காஞ்சனா திருமணம் நடக்கிறதா, முத்துராமன் விஜயகுமாரியுடன் சேருகிறாரா? என்பதயெல்லாம் வெள்ளித்திரையில காண வாருங்கள் என்று கமர்சியல் தான் போடமுடியும். கதையை கொடுத்துவிட்டேன் (அப்படியெல்லாம் இல்லாமலேயே) என்று ஒரு வாசகர் கொந்தளித்துவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எங்கேயாவது டிவிடி கிடைக்கமலா போய்விடும்?

”மௌணமே பார்வையாய்” என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் பாட்டு பெரிய ஹிட். எம்.எஸ்.வியின் இசையில் அருமையாக இருக்கிறது.

அம்மா கேரக்டர் யாரென்று கண்டு பிடித்து கூறுபவர்களுக்கு நூறு கைத்தட்டல்கள் இனாம்.

நூற்றுக்கு அறுபத்தைந்து மதிப்பெண்கள்.

திருப்பதி கோவிலுக்கு 15 கோடி ரூபாய் கொடுத்த காஞ்சனா


கோபால் அனுப்பிய இன்னொரு செய்தி. இது உண்மையா, யாராவது confirm செய்ய முடியுமா?

கோபால் இந்த செய்தியை உறுதிப்படுத்துகிறார். திருப்பதி தேவஸ்தானம் இந்த செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கிறதாம்.

சென்னை : “பழம் பெரும் நடிகை காஞ்சனா அளித்த நிலம் ஆன்மிக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்’ என, திருமலை – திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரி கிருஷ்ண ராவ் அளித்த பேட்டி: சென்னை, தி. நகர், ஜி.என். செட்டித் தெருவில் உள்ள தனக்கு சொந்தமான 9,360 சதுரடி நிலத்தை நடிகை காஞ்சனாவும், அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அளித்துள்ளனர். இதில், 4,500 சதுரடி காலி நிலமாகும். இதன் மார்க்கெட் மதிப்பு 20 கோடிக்கு மேலாகும். பொதுவாக, திருமலை கோவிலுக்கு தானமாக அளிக்கப்படும் நிலங்களை நிர்வாக வசதிக்காக, விற்பனை செய்யும் பழக்கம் உண்டு. ஆனால், “இந்த நிலத்தை விற்பனை செய்யக் கூடாது அதை ஆன்மிக பணிகளுக்கே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என நடிகையும், அவரது சகோதரியும் கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். இன்று, அந்த நிலத்தை பார்வையிட்டோம். அந்த இடத்தை எப்படி ஆன்மிக பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கொஞ்ச நாள் முன்புதான் காஞ்சனா பணமுடையால் அவதி என்று படித்தேன். இப்போது இந்த செய்தி.

திருப்பதி: திருமலை ஏழுலையான் கோயிலுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை காஞ்சனா.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்தவர் நடிகை காஞ்சனா. தெலுங்கிலும் ஏராளமான படங்கள் நடித்துள்ள இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

இந்த நிலையில், சென்னை ஜிஎன் செட்டி சாலையில் தனக்கு சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்து பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இந்த இடத்தில் கல்யாண மண்டபம் அல்லது சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு கூட காஞ்சனா மிகுந்த பணக் கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வந்தன. மனநிலை சரியில்லாததால் அவரை உறவினர்கள் கைவிட்டுவிட்டதாகவும், குடியிருக்க வீடு கூட இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை உடனடியாக மறுத்து விளக்கமளித்திருந்தார் காஞ்சனா.

அவரிடம் இவ்வளவு நிலம் இருப்பது பற்றி யாருக்கும் தெரியவும் இல்லை. அவரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்


நண்பர் கோபால் அனுப்பிய ஃபோட்டோக்கள்

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->கோபால் பதிவுகள்

காதலிக்க நேரமில்லை (Part 4)


காதலிக்க நேரமில்லை – பிற வகைகள் ( மணிவன்னன் – இது ஸ்ரீதர் பற்றியது இல்லை – மகிழ்ச்சி தானே?)

வகை ஒன்று

தெலுங்கில் காதலிக்க நேரமில்லை அடுத்த வருடம் அதாவது 1965ல் ”பிரெமின்ச்சு சூடு” (Preminchu Choodu) என்ற பெயரில் black & whiteல் வெளிவந்தது.

நாகேஸ்வர்ராவ், ராஜஸ்ரீ, காஞ்சனா நடித்தது. P. புல்லையா டைரக்ட் செய்ய மாஸ்டர் வேணு பாடல்களை ரீமேக் செய்தார். தமிழ் வெற்றியயை தொடர்ந்து P.புல்லையாவும், சாந்தகுமாரும் தைரியமாக காசை செல்வழித்தார்கள்.

இங்கே இரண்டு பாடல் காட்சிகள்:

இங்கே பிற பாடல்கள்

வகை இரண்டு

மனோபாலா ஸ்ரீதரிடம் அனுமதி பெற்று காதலிக்க நேரமில்லை திரைபடத்தை ரீமேக் பண்ணுகிறார். இதில் சினேகா, நமிதா, பிருத்திவிராஜ், வினய், வடிவேல், சந்தியா, கீர்த்தி சாவ்லா எல்லாம் நடிப்பதாக ஒரு கிசு கிசு. வடிவேலுவை பாலையாவாகவோ, நாகேஷாகவோ பார்ப்போம். யுவன் சங்கர் ராஜா இசை. ப்ரசன்னா நடிப்பதாக ஒரு வதந்தி. பார்ப்போம் கடைசியில் என்ன நடக்கிறது என்று.

வகை மூன்று

விஜய் டி.வி. காதலிக்க நேரமில்லை என்ற ஒரு சீரியல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் வருகிறதா என்று தெரியவில்லை. டைடில் மியூசிக் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிங்கப்பூரில் மாட்டிக் கொண்ட இரண்டு பேருக்கு கல்யாணம் ஒரு சுமையாக இருப்பது கதை என நினக்கிறேன். எனக்கு விஜய் டி.வி. பார்க்கும் வாய்ப்பு இல்லததால் அதிகம் தெரியாது.

(ஒரு வழியாக ஸ்ரீதரின் ஆத்மாவை சாந்தி அடைய வைத்துவிட்டோம் என நினைக்கிறேன்)

காதலிக்க நேரமில்லை – Part 3


1964லில் சித்ராலயா வெளியிட்ட திரைப்படம்.

இந்த சினிமாவை ஒரு பத்துமுறையாவது நான் பார்த்திருப்பேன். இன்னும் ஒரு பத்து முறை பார்த்தாலும் ஆச்சரியம் இல்லை.

நடிகர்கள் – பாலையா, முத்துராமன், நாகேஷ், ரவிச்சந்திரன் (அறிமுகம்),  வி.எஸ். ராகவன், வீராசாமி

நடிகைகள் – ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா (அறிமுகம்)

கதை வசனம் – ஸ்ரீதர் & கோபு

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன் உதவி: பஞ்சு அருணாசலம்

பின்னணி – P.B.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, L.R.ஈஸ்வரி, ராஜூ

நடனம் – தங்கப்பன் உதவி: M.சுந்தரம் – பின்னாளில் தங்கப்பனிடம் கமல் உதவி நடன இயக்குநராக சில வருடங்கள் பணியாற்றினார்.

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன், ராமமூர்த்தி உதவி- கோவர்த்தன், ஹென்றி டேனியல்

அசோசியேட் டைரக்டர் – C.V.ராஜேந்திரன் அசோசியேட் டைரக்டராக – C.V.ராஜேந்திரன் பணியாற்றிய முதல் படம். தனது உறவினராக (தம்பி முறை) இருந்தாலும் பல முறை கேட்டும் அவருக்கு திறமை வந்த பிறகே அசோசியேட் ஆக்கினார்.

உதவி டைரக்டர் – லெனின்

டைரக்‌ஷன் – ஸ்ரீதர்

ஸ்ரீதரின் மாஸ்டர்பீஸ். இரண்டு நண்பர்கள் ஒரு செல்வந்தரை ஏமாற்றி அவர் பெண்களை கைப்பிடிப்பதுதான் கதை. ஒரு வரியில் சொல்லிவிடக்கூடிய இந்த கதையை திரைகதையினால் மூன்று மணி நேர எண்டர்டெய்ன்மண்டாக மற்றுவதில் தான் ஒரு இயக்குனரின் ingenuity தெரிகிறது. இதைத் தான் ஸ்ரீதர் வெளிப்படுத்திஇருக்கிறார்.

இதில் நுணுக்கமான ஒரு டெக்னிக் ஸ்ரீதர் கையாண்டிருக்கிறார். வழக்கமாக ஒரு சோகமான மெய்ன் கதை இருக்குமிடத்தில் ஒரு மாற்றத்திற்க்காக ஒரு காமெடி ட்ராக் இருக்கும். உதாரணத்திற்கு கல்யாணப்பரிசில் மன்னார் & கோ மற்றும் போலி பைரவன். ஆனால் இதில் மெய்ன் கதையே காமெடி தான். காமெடியில் ஒரு காமெடி ட்ராக். சிலர் இதை ஸ்ரீதர் கோட்டை விட்ட விஷயம் என்று கூறலாம். என்னை பொறுத்தவரையில் இரண்டுமே (main and comedy tracks) வெளுத்து வாங்கியது. அதனால் இந்த டெக்னிக் சக்ஸஸ் தான்.

பொள்ளாச்சிக்கு அருகில் அருமையான மலைகள், மற்றும் தண்ணீர் நிறைந்த இயற்க்கை சூழலில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான, பெரும்பாலும் அரசியல்வாதிகளும், junketல் செல்லும் பெரிய சர்க்கார் பதவியில் இருக்கும் ஆஃபீஸர்களும் அனுபவிக்க கட்டபட்ட ஒரு Traveller’s Bungalow (TB) பாலையாவின் வீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஓரு சீனில் இரவில் எல்லோரும் டின்னர் சாப்பிடும் காட்சி. ரம்யமான் சூழ்நிலயை படத்தில் பிரதிபலித்திருக்கிறார்கள். அனேகமாக அது சினிமா ஷூட்டிங்கிற்க்கு வந்த அனைவரும் enjoy பண்ணிய ஒரு டின்னராக இருந்திருக்க வேண்டும்.

ரவிச்சந்திரனும், காஞ்சனாவும் அறிமுகமாக இருந்தாலும் நன்றாக திரைகதையுடன் ஒன்றி இருக்கிறார்கள். ரவிச்சந்திரனின் நடனம் கொஞசம் அலட்டலாக இருந்தாலும் அந்த காலத்து தேவ் ஆனந்த், சஷிகபூர் style போன்று இருப்பதால் ரசிகர்களுக்கு பழக்கமாகி இருக்க வேண்டும். அவர் பாலையா மற்றும் முத்துராமனுடன் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

காஞ்சனா மென்மையான அக்கா ரோலில் வந்து முத்துராமனை காதலித்துவிட்டு செல்கிறார். பசுமையான இயற்ககை காட்சிக்கு இவருடைய ஈஸ்ட்மென் பிங்க் கலர் கலர்ஃபுல் தான்.

ராஜஸ்ரீ தங்கை ரோல். இவர் ரவிசந்திரனுடன் இரண்டு, மூன்று பாடல்கள் பாடிச் செல்கிறார். இவருடைய காதல் கதையை முடிப்பதற்க்கு முத்துராமனை பாலையாவிடம் கதைவிட வைத்து ஸ்ரீதர் கதைவிட்டிருக்கிறார்.

இப்படி இவர்கள் விட்டுக்கொண்டிருக்கும் பொழுது நாகேஷ் தந்தை பாலையாவிடம் சினிமா எடுக்கப் போகிறேன் என்று கதைவிட்டுக்கொண்டிருப்பார். இவருடைய சினிமா கம்பெனி பெயர் “ஓஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்”. இவருடைய காமெடி அன்று பெரிய அளவில் ஹிட்.  முத்துராமனை பார்ப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கும் பாலையாவிற்க்கு கதை சொல்கிறேன் பேர்வழி என்று அவரை பயமுறுத்தும் காட்சி இவர் கொடுத்த ஹிட்.

அவர் சச்சுவை ஹீரோயினாக ஆக்கியதும் போடும் கண்டிஷன்களும் சினிமாவிற்க்கு ஃபாலோ பண்ண வேண்டிய ரூல்ஸை சொல்லும் விதம் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கும். சினிமாவிற்க்கு ஃபைனான்ஸ் பண்ண யாரும் இல்லததால் ”ஒஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்” அவருடன் தங்கி விடுகிறது.

பாலையா அப்பாவியாக நடித்து வெளுத்து கட்டியிருக்கிறார். அவருடைய பண ஆசை அவருடைய அறிவை மயக்கிவிடுகிறது. அவர் வா, போ, என்று தன் சின்னமலை எஸ்டேட் மேனேஜர் அசோக்கிற்க்கு  (ரவிச்சந்திரன்) கட்டளையிட்டு கொண்டிருப்பார். ஆனால் செல்வந்தர் சிதம்பரத்தின் (முத்துராமன்) மகன் எனத் தெரிந்ததும் ஆச்சரியத்தில் ”அசோகர் உங்க மகரா?” என்று கேட்பது அருமையான் ஹாஸ்யம். (கல்லூரியில் படிக்கும் போது இந்த ஒரு காட்சி எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.) இப்படி பல காட்சிகள்.

நடிப்பு செல்வந்தர் சிதம்பரமாக வரும் முத்துராமன் அபாரமாக நடித்திருக்கிறார். முத்துராமனின் மிடுக்கான நடிப்பு எதோ உண்மையில் 1960களில் ஒரு பெரிய செல்வந்தர் பேசுவது போல் இருந்தது. டைமிங் அருமையாக synchronize ஆகியிருக்கிறது.

சென்னை காசினோ தியேட்டரில் வெளியிடப்பட்டு முதல் 25 நாட்கள் அனைத்து ஷோவும் ஹவுஸ் புல்லாகி ரிகார்ட் ஏற்படுத்திய படம்.

(இன்னும் ஒரு சிறிய பார்ட் எழுதுவதாக இருக்கிறேன். அது அடுத்த வாரம்.)

காதலிக்க நேரமில்லை (Part 2 -ஒலியும் ஒளியும்)


(ஆனந்த விகடன் விமர்சனம்  – Part 1)

Eisenhower Down Down!

Eisenhower Down Down!

Eisenhower Down Down!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

குடியரசு கட்சியின் சார்பாக அமெரிக்காவின் 34ஆவது ஜனாதிபதியாக இருந்து வந்த Dwight Eisenhowerஐ எதிர்த்து கோஷம் எழுப்பிய அன்றைய அமெரிக்கர்கள் குழம்பிக்கொண்டிருந்த MSVக்கு ”இந்தா பிடி மெட்டுக்கு ஐடியா” என்று இந்த உதவியை செய்து விட்டுப் போனார்கள்.

பிறந்து விட்டது “மாடி மேலே மாடி கட்டி” என்ற இந்த ஹிட் பாடல்

பிய்த்து விட்டார் MSV

பொன்னான கைகள் புண்ணாகலாமா? விட்டுவிடுவோமா?

ராஜஸ்ரீ அவர்களுக்கு அனுபவம் புதுமை.

முத்துராமனின் பார்வை இடை மெலியவைப்பது ஆனால் காஞ்சனாவின் பார்வை முத்துராமனை தனனை மறக்கவைப்பது.

வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியில்லை; ஆனால் இப்பொழுது காதலிக்க காதலி இல்லை; மனைவி உண்டு; த்ரில் உண்டா?

மலரென்ற முகம் சிரிக்கட்டும்

நெஞ்சத்தை அள்ளிக் கொஞசம் தா

காதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்


காதலிக்க நேரமில்லை பற்றி எழுத பக்ஸுக்கு இன்னும் நேரமில்லை. ஆனந்த விகடன் விமர்சனம் கீழே.

சின்னமலை ஏலக்காய் எஸ்டேட் முதலாளிக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் காஞ்சனாவைப் பணக்கார வாலிபன் வாசுவும், இளையவள் நிர்மலாவை, அவனுடைய ஏழை நண்பனான அசோக்கும் காதலிக்கிறார்கள். நண்பனின் காதல் நிறைவேறுவதற்காக வாசு, அசோக்கின் கோடீஸ்வர தந்தை போல் வேஷம் போடுகிறான். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிகிறது. நகைச்சுவை நிகழ்ச்சிகள் பல நடக்கின்றன. கடைசியில் குட்டு வெளிப்பட்ட போதிலும், இருவர் காதலும் திருமணத்தில் முடிகிறது.

கதை: ஸ்ரீதர்-கோபு

சேகர்: படம் பிரமாதம் சந்தர், நீ என்ன சொல்றே?

சந்தர்: சந்தேகமென்ன? இரண்டரை மணி நேரம் ஒரு இடத்திலும் ‘போர்’ அடிக்காமல், வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்கும்படி இந்த மாதிரி ஒரு படம், இதுவரை தமிழில் வந்ததே இல்லை.

சேகர்: புதுப் புது முயற்சிகள் செய்யும் ஸ்ரீதரின் மற்றொரு சாதனை இந்தப் படம்.

சந்தர்: தமிழ்ப்படமென்றால், கட்டிலும் கண்ணீரும்தான் இருக்கும் என்ற கெட்ட பெயரை அடியோடு மாற்றிவிட்டார். இருமலும் உறுமலும் இல்லாமல், கதையை ஜாலியாகப் பின்னியிருக்கிறார்.

சேகர்: ஆமாம்! ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இரண்டு படங்களிலும் காதலின் துன்பமான பகுதியை எடுத்துக் காட்டியவர், இதில் காதலின் நகைச்சுவையை மிக அழகாக சித்திரித்திருக்கிறார்.

சந்தர்: புதுமுகம் காஞ்சனா புடவை அணிந்து நம் நாட்டுப் பாணியில் காட்சி அளிக்கும்போது தான் அழகாக இருக்கிறார். அநாவசியமாக அவருக்கு மேனாட்டுப் பாணி உடை அணிவித்திருக்க வேண்டாம்.

சேகர்: யு ஆர் ரைட்! மற்றபடி, பார்த்த முகங்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப்போன கண்களுக்கு, புதுமுகங்களை வண் ணத்தில் புதுமையான பாத்திரத்தில் பார்க்கும்போது, பெரிய விருந்தாக இருக்கிறது.

சந்தர்: ஆமாம் சேகர், நீ புதுமுகம் என்று சொன்ன பிறகு தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் அவர்கள் புதுமுகம் மாதிரியா நடித்திருக்கிறார்கள்?

சேகர்: நோ, நோ! பழக்கப்பட்ட நடிகர்களைப் போல ‘ஃப்ரீ’யாகத் துள்ளித் திரிந்து விளையாடி இருக்கிறார்கள்.

சந்தர்: பாலையா, முத்துராமன், நாகேஷ் எல்லோரும் சக்கைப் போடு போட்டுவிட்டார்கள்.

சேகர்: ஆமாம். அதுவும் ‘வில்லன்’ பாலையா, இந்தப் படத்தில் ஒரு ‘ஃபஸ்ட் க்ளாஸ்’ காமெடியனாகக் காட்சியளிக்கிறார். அவர் கோடீஸ்வரர்கிட்டே ‘குழைஞ்சு குழைஞ்சு’ பேசுவதை இப்போ நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சந்தர்: நாகேஷ் மட்டும் என்ன? ‘ஓகோ’ன்னு நடிச்சிருக்கார். அவர் பேசற ஒவ்வொரு டயலாக்கும் ஒரு சிரிப்பு வேட்டு! அதுவும் பாலையாவிடம் ‘சஸ்பென்ஸ்’ கதை சொல்ற காட்சியிருக்கே, பைத்தியம் பிடிச்ச மாதிரியில்லே தியேட்டர்லே அத்தனை பேரும் வயிறு வெடிக்க சிரிக்க வேண்டியிருக்கு.

சேகர்: வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் ரொம்ப ஜோர்!

சந்தர்: இந்தியிலோ, தமிழிலோ இது மாதிரி ஒரு கலர்ப் படம் இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. ஆகா… எத்தனை குளிர்ச்சி, என்ன அழகு! ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறந்த வண்ண ஓவியம் மாதிரி இருந்தது. இதனால் வின்சென்ட் மேலும் ஒரு படி உயர்ந்திருக்கிறார்.

சேகர்: படம் கடைசி அரை மணிதான் கொஞ்சம் இழுத்த மாதிரி இருந்தது.

சந்தர்: ஆமாம்! அதுகூட ‘போலீஸ் ஸ்டேஷன் ஹாஸ்யத்திலே’ மறைந்து போய்விடுகிறது.

சேகர்: மொத்தத்திலே சித்ராலயா கலைக் குழுவினர், ஸ்ரீதர், ஜெமினி கலர் லாபரடரி எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்ப் பட உலகுக்கு ஒரு சிறந்த, புதுமையான பொழுதுபோக்கு நகைச் சுவைச் சித்திரத்தை அளித்திருக்கிறார்கள்.

மறக்க முடியுமா (Marakka Mudiyuma)


1966இல் வந்த படம். எஸ்.எஸ்.ஆர்., தேவிகா, காஞ்சனா, முத்துராமன், சோ, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், மேஜர், சாரங்கபாணி, எஸ்.என். லக்ஷ்மி, ஏ. கருணாநிதி நடிப்பு. கலைஞரின் கதை. டி.கே. ராமமூர்த்தி இசை. முரசொலி மாறன் தயாரித்து இயக்கி இருக்கிறார்.

தமிழ் நாட்டில் நல்லதங்காள் பாரம்பரியம் என்று ஒன்று உண்டு. சோகத்தை பிழிந்து எடுத்துவிடுவார்கள். இதுவும் அதே மாடல்தான். கடைசியில் சோ தேவிகாவை பார்த்து ஒரு வசனம் பேசுகிறார் – “வாழ்க்கையிலே வர வேண்டிய ட்ராஜெடி எல்லாம் உங்களுக்கு வந்துவிட்டதே” என்று. படத்துக்கு ஒன் லைனர் என்ன என்று கலைஞரும் மாறனும் டிஸ்கஸ் செய்து இருந்தால் இதுதான் என்று முடிவு செய்திருப்பார்கள்.

சிறு வயதில் தேவிகாவின் தாய் அவுட். அப்பா குருடாகி வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தம்பிகளும் பிரிந்துவிடுகிறார்கள். எஜமான் மேஜரின் மகனான முத்துராமனை லவ் செய்வது தெரிந்து மேஜர் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். ஆனால் முத்துராமன் வீட்டை விட்டு ஓடி வந்து தேவிகாவை கல்யாணம் செய்து கொள்கிறார். என்னடா ரொம்ப நேரமாக சோகம் எதுவும் இல்லையே என்று இயக்குனர் உடனே முத்துராமனை தீர்த்துவிடுகிறார். நடுவில் ஒரு தம்பியான எஸ்.எஸ்.ஆர். மீது திருட்டு பட்டம். ஜெயிலில் இருந்து வரும் ஏழையான எஸ்.எஸ்.ஆர் இன்னொரு ஏழையான தன் தம்பி சோவுடன் சேர்ந்து ரேசுக்கு போகிறார், தண்ணி அடிக்கிறார், பிறகு எல்லாவற்றிலும் பெரிய பாவமான மேலை நாட்டு நடனம் ஆடுகிறார். இந்த மாதிரி “கலாசார சீரழிவு” எல்லாம் அந்த காலத்தில் ஃப்ரீ போலிருக்கிறது. கலைஞர் இப்போது டாஸ்மாக்காவது ஃப்ரீ ஆக்கி அந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டுவரலாம்.

தேவிகாவும் சோவும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். குழந்தைக்கு மருந்து வாங்க சோ தன் அப்பாவிடம் – அவர் இப்போது ஒரு குருட்டு பிச்சைக்காரன் – பணம் திருடப் போய் போலீசில் சிக்கிக் கொள்கிறார். ஆனால் அப்பாவும் சோவும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தேவிகா தன் மானத்தை மிகுந்த தயக்கத்துடன் விற்கத் தயாராகிவிட்டார். அந்த மானத்தை வாங்க “காகித ஓடம் கடலலை மீது” என்று குடும்பப் பாட்டை பாடிக்கொண்டே போதையில் எஸ்.எஸ்.ஆர். வருகிறார். பாட்டை அக்கா தொடர, எஸ்.எஸ்.ஆருக்கு உலகமே சுழல, அக்கா மிச்ச பாட்டை பாடி முடித்துவிட்டு தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ள, எல்லாரும் கொஞ்சம் வசனம் பேசி விட்டு திருந்தி எஸ்.எஸ்.ஆரும் காஞ்சனாவும் கல்யாணம் செய்துகொண்டு, எஸ்.எஸ்.ஆர். என் அக்காவை மறக்க முடியுமா என்று சொல்லி சுபம்! (ஹீரோயின் செத்தாலும் எனக்கு சுபம்தான்!)

எஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி powerful காட்சி. இப்போதும் ரத்தம் உறைகிறது. நாற்பது வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து என் மாமியார் இது மோசமான படம், பார்க்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இந்த காட்சியில் ஏற்பட்ட aversionதானோ என்னவோ?

இந்த படத்தை பார்த்துதான் யாதோன் கி பாராத் படம் எடுத்தார்களா என்ன? சிறு வயதில் பிரியும் சகோதர சகோதரிகள், குடும்பப் பாட்டு, ரயில் வண்டியில் பிரியும் குழந்தைகள், அக்கா தம்பிகள் சந்திக்கும்போது காகித ஓடம் பாட்டு பின்னணி இசையில் என்று பல முறை பார்த்திருக்கும் தீம்கள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியதா?

ஹிந்துக் கடவுள்கள் ரோல் செய்ய மாட்டேன் என்று சொல்லி இலட்சிய நடிகர் என்று பட்டம் வாங்கிய எஸ்.எஸ்.ஆர்., இதில் கிருஷ்ணன் ரோல் போடும் நடிகராக வருகிறார். 🙂

ஆச்சரியப்படும் விதமாக தேவிகா underplay செய்கிறார்.

ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. எனக்கு கதை, பாட்டு இவற்றை மட்டும்தான் ரசிக்கத் தெரியும். நானே ஒளிப்பதிவை கவனித்தேன் என்றால் நன்றாக இருந்திருக்கவேண்டும்.

மருந்துக்கு கூட ஒரு நகைச்சுவை காட்சி இல்லை. மாறன் தைரியசாலிதான். தப்பாக எழுதிவிட்டேன். எஸ்.எஸ்.ஆர் சமைக்கும் காட்சிகள் நகைச்சுவை காட்சிகள்தான், சிரிப்புதான் வரவில்லை. இது சோகப் படம் என்பதாலோ என்னவோ இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என்று நமக்கு சோகம் ஏற்படுகிறது.

காகித ஓடம்” பாட்டு வரப்போகும் சோகத்தை அருமையாக கோடி காட்டுகிறது. சுசீலாவின் குரல் ஜாலம் செய்கிறது. இதை போன்ற எனக்கு “தேவன் கோவில் மணியோசை” பாட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு கதை உண்டு. பாட்டு எழுத வந்திருந்த மாயவநாதன் ட்யூனை கொடுங்க கொடுங்க என்று ராமமூர்த்தியை பிய்த்து எடுத்தாராம். கோபம் வந்த ராமமூர்த்தி “மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் – இதுதான்யா ட்யூன்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். இதைக் கேட்ட கலைஞர் “காகித ஓடம் கடலலை மீது” என்று எழுதினாராம். டிஎம் எஸ், சுசீலா இருவரும் பாடும் ஒரு வெர்ஷனும் உண்டு.

“வானும் நிலமும் வீடு” என்ற ஏ.எல். ராகவன் பாட்டு நான் முன்னால் கேட்டதில்லை. அருமையான எழுத்து.
“வானும் நிலமும் வீடு
காற்றும் மழையும் உணவு
காலும் கையும் ஆடை
ஏழை வாழ்வு சிம்பிள்”
எளிமையான அருமையான வார்த்தைகள். பாட்டு பிரமாதம். சோவுக்கு ஆடத் தெரியாவிட்டாலும் படமாக்கப்பட்டிர்ந்த விதமும் பிரமாதம். எழுதியவர் மாயவநாதன்.

“எட்டி எட்டி ஓடும் போது கொதிக்குது நெஞ்சம்” திருச்சி தியாகராஜன் எழுதி டிஎம் எஸ் பாடியது.
“ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்” கலைஞர் எழுதி டிஎம் எஸ், சுசீலா பாடியது.
“வசந்த காலம் வருமோ” என்ற சுரதா எழுதிய பாட்டும் இதில்தானாம். ஆனால் கட் செய்துவிட்டார்கள். அது நல்ல பாட்டு.

ஜோடி பிரிந்ததற்கு பின் ராமமூர்த்தி இசை அமைத்த படங்கள் மிக குறைவு (நான், மறக்க முடியுமா, சாது மிரண்டால்). நான் ஹிட். இதுவும் ஹிட். பிறகு அவருக்கு ஏன் மேலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை?

எதிர்பாராமல் வந்த “வானும் நிலமும் வீடு” பாட்டு, “காகித ஓடம்” பாட்டு, எஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி ஆகியவற்றுக்காக பார்க்கலாம். டிவியில் மெகா சீரியல்கள் பார்ப்பவர்கள் தைரியமாக பார்க்கலாம், பைசா வசூல் ஆகிவிடும். 10க்கு 6 மார்க். C grade.

அவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)


இன்னும் ஒரு லேட்டான விமர்சனம்.

முதலில் என் தமிழ் புலமையை காட்டிக்கொள்கிறேன். 🙂 ஆங்கிலத்தில் a/an விதியைப் போல தமிழிலும் ஒரு/ஓர் சொற்களுக்கு ஒரு விதி உண்டு, தெரியுமா? அடுத்த சொல் ஓர் உயிரெழுத்தோடு ஆரம்பித்தால் “ஓர்” என்ற வார்த்தையையும் இல்லாவிட்டால் “ஒரு” என்ற வார்த்தையையும் பயன்படுத்தவேண்டும். அப்பாடா! நான் தமிழ் ஆசிரியையின் தவப்புதல்வன் என்பதை நிரூபித்துவிட்டேன்.

1971இல் வந்த படம். ஜெமினி, பாரதி, காஞ்சனா, முத்துராமன், மேஜர் நடித்து, எம்எஸ்வி இசையில் ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த படம். ஸ்ரீதர் இந்த படத்தை ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். ஹிந்தியில் “துனியா க்யா ஜானே” என்ற பெயர். தமிழில் சுமாராக ஓடியது, ஆனால் ஹிந்தியில் படுபயங்கர flop. ஸ்ரீதரின் பணக்கஷ்டங்கள் இங்கிருந்துதான் ஆரம்பித்தது என்று சொல்வார்கள். (உரிமைக் குரலோடு எல்லா ப்ராப்ளமும் solved.) அருமையான பாட்டுக்கள்.

60களிலும் 70களிலும் விகடனில் தொடர்கதைகளாக வந்த மணியன் கதைகளை யாராவது படித்திருக்கிறீர்களா? அன்று மிகவும் விரும்பி படிக்கப்பட்ட கதைகள். முக்கால்வாசி கதைகளில் கதாநாயகி ஒரு ஆணுடன் மிகவும் “அபாயமான” அளவுக்கு நெருங்கி பழகுவாள், ஆனால் எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் அவள் “புனிதம்” மட்டும் கெடாது. இந்த படத்தை பார்க்கும்போது அவரது கதைகள் ஞாபகம் வந்தது. முத்துராமன் ரொம்ப ரொம்ப கெட்டவர். பல பெண்களை ஏமற்றியவர். பண மோசடி செய்பவர். பாரதிக்கு ஊற்றிக்கொடுப்பார், ராத்திரி 12 மணிக்கு அவர் நண்பர்கள் முன்னால் ஆடிக்காட்ட சொல்லுவார், படுக்கைக்கும் தூக்கிகொண்டு போவார். பாரதி அவர் என்ன சொன்னாலும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் (இந்த கட்டாயத்தைப் பற்றி பிறகு) ஆனால் ஒன்றும் செய்யாமல் பாரதியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். முத்துராமன் புழங்கும் upper classஇன் values அப்படி! He is not just a crook, but he is an upper class, gentleman crook!

கதை இன்று விசித்திரமாக இருக்கிறது. பாரதியும் காஞ்சனாவும் கல்லூரி தோழிகள். முறைப்பையன் ஜெமினி வீட்டில் வளரும் பாரதி அவரை விரும்புகிறார். ஜெமினியின் அப்பா மேஜர் பாரதியை சுதந்திரமாக வளர்க்கிறார். காஞ்சனா முத்துராமனை விரும்பி அவருக்கு லவ் லெட்டர் எல்லாம் கொடுப்பார், ஆனால் அவர் மோசடி பேர்வழி என்று தெரிந்து விலகிவிடுவார். பிறகு ஜெமினியும் அவரும் காதலிப்பார்கள். பாரதி ஏமாற்றம் அடைந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். கணவன் மனைவியன ஜெமினி காஞ்சனாவைக் கானும்போது பாரதிக்கு பொறாமையாக இருக்கும், அதனால் முத்துராமனுடன் டேட்டிங் போவார். முத்துராமன் காஞ்சனாவின் லவ் லெட்டர்களை வைத்துக்கொண்டு பாரதியை ப்ளாக்மெய்ல் செய்வார். தன்னுடன் டேட்டிங் வரவேன்டும் என்று வற்புறுத்துவார். த்யாகச்சுடர் பாரதியும் தன் மாமன் வீட்டு கௌரவம் பாழாகாமல் இருக்க முத்துராமன் சொன்னபடியெல்லாம் ஆடுவார். ராத்திரி வெகு நேரம் வெளித்தங்குவார், குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார், அவ்வப்போது அழுவார், கடைசியுல் முத்துராமனை கொன்றுவிட்டு வெள்ளைபுடவையில் ஜெயிலுக்கு போவார்.

லவ் லெட்டரால் குடும்ப கௌரவம் பாழாகிவிடும், ஆனால் கல்யாணம் ஆகாத பெண் குடித்துவிட்டு ராத்திரி கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடினால் பாழாகாது போலிருக்கிறது. விசித்திரமான கௌரவம். I think the director really tries to titilate the viewers by the Muthuraman-Bharathi relationship. “அவள்” படத்திலும் இப்படித்தான் தன்னை அறியாமலே குடி மயக்கத்தில் சோரம் போகும் காட்சி ஒன்றை வைத்திருப்பார். ஸ்ரீதர் 1960களின் hippies, free sex உலகத்தை புரிந்து கொள்ள செய்யும் முயற்சி!

இந்த படம் கலை ரீதியாக மிக நல்ல படம் என்று நினைப்பவர்கள் உண்டு. ஒரு பெண்ணின் மெல்லிய மன உணர்வுகளை அருமையாக சித்தரிக்கும் படம் என்று சொல்பவர்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் மணியன் கதைகளும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை லாஜிக் இல்லாத முட்டாள்தனமான கதை.

இந்த கதையிலும் பாரதி நன்றாக நடித்திருப்பார். ஒரு வேளை அழகாக இருப்பதால் எனக்கு இப்படி தோன்றுகிறதோ என்னவோ? ஜெமினிக்கு சாம்பார் என்று பேர் வந்ததற்கு இந்த படமும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். அதுவும் சில பாட்டுகளுக்கு அவர் இடுப்பை வளைத்து கொடுக்கும் போஸ்கள் பெரும் கொடுமை. ஜெமினிக்கு இளம் கதாநாயகன் வேஷம் கொஞ்சம் பொருந்தவில்லை, வயதாகிவிட்டது.

கலர் படம் என்றால் எல்லா காட்சிகளிலும் அழுத்தமான கலர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்த காலம். எல்லா காட்சிகளும் அப்படித்தான்.

படம் எவ்வளவு மோசமாக எடுத்தாலும் ஸ்ரீதர் பாட்டுகளை அருமையாக தேர்ந்தெடுப்பார். அதுவும் எம்எஸ்வி ஸ்ரீதர் காம்பினேஷன் சோடை போவதே இல்லை. இந்தப் படமும் அப்படித்தான். பாட்டுக்கள் ஏ க்ளாஸ். கேட்க கேட்க அலுப்பதில்லை. படம் எவ்வளவு கடியாக இருந்தாலும் என்னைப் போன்ற பழைய பாட்டு கிறுக்குகள் இந்த படத்தை பார்த்தே தீருவார்கள். “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” பாட்டு ஒன்றே போதும். இது இல்லாவிட்டாலும் “மங்கையரில் மஹராணி” பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். இதற்கு மேல் “மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி” பாட்டு வேறு. “ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு” இந்த அளவுக்கு இல்லை என்றாலும் நல்ல பாட்டுதான். இந்தப் படம் எம்எஸ்வியின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்று. எஸ்பிபிக்கு முழு வாய்ப்பு கொடுத்த படம். எஸ்பிபியின் குரல் இன்னும் முழுமை அடையவில்லைதான், ஆனால் அவரது குரலில் ஒரு இளமை தெரிகிறது.

“உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” தமிழில் தலை சிறந்த பாட்டுகளில் ஒன்று. எஸ். ஜானகி, எம்எஸ்வி இருவருக்குமே ஒரு மகுடம். பாட்டின் வரிகளிலிருந்து கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். வாலி எழுதி இருந்தால் ஆச்சரியப்படமாட்டேன். அழகான பாரதி வேறு.

“மங்கையரில் மஹராணி” பாட்டும் “உன்னிடத்தில்” பாட்டுக்கு ஒரே ஒரு மாற்றுதான் கம்மி. எஸ்பிபியின் ஆரம்ப கால பாட்டுகளுக்கே ஒரு தனி இனிமை உண்டு. இந்த பாட்டும் அப்படித்தான். சுசீலா அருமையான ஜோடி. கண்ணதாசன் எழுதியது.

“மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி” ஒரு கலக்கலான பாட்டு. மெதுவாக “மலர் எது” என்று ஆரம்பித்து “கண்கள் தானென்று சொல்வேனடி” என்று அழுத்தமாக சொல்வது பிரமாதம். சுசீலா சுசீலாதான். இதுவும் கண்ணதாசன் எழுதியதாக இருக்கவேண்டும். இதில் இளையராஜா காம்போ ஆர்கன் வாசித்திருக்கிறாராம். இந்த பாட்டுக்கு எம்எஸ்வி இசை நடத்திய விதத்தையும், மெட்டையும் புகழ்ந்து எழுதி இருக்கிறார். எம்எஸ்வியின் மேல் அவருக்கு இருந்த மரியாதை இந்த பாட்டால் அதிகரித்தாக எழுதி இருக்கிறார்.

இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

“ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு” நல்ல பாட்டுதான். இந்த மூன்று பாட்டுகளோடு ஒப்பிட்டால்தான் கொஞ்சம் குறைத்து மதிப்பிட வேண்டியிருக்கிறது. எஸ்பிபி, கண்ணதாசன்.

இதை தவிர இரண்டு பாட்டுகள் இருக்கின்றன. “எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை” எல்.ஆர். ஈஸ்வரி பாடியது. சுமாரான பாட்டு. “தேவியின் கோவில் பறவை” எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. முன்னால் கேட்டதும் இல்லை.

நான் மிகவும் மதிக்கும் சாரதாவின் மறுமொழியிலிருந்து நான் மிஸ் செய்து விட்ட ஒரு பாயின்ட்: யு.ராஜகோபாலின் அருமையான ஒளிப்பதிவு பற்றியும் சொல்லியிருக்கலாம். (வழக்கமாகவே ஸ்ரீதர் படங்களில் அவர்தான் முக்கிய கேமராமேன். அவர் ஒவ்வொரு ஆங்கிளும் செட் பண்ணும் அழகே தனி). குறிப்பாக ‘உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்’ பாடலின் போட் சீன் அருமை. அதுபோல், ‘மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி’ பாடலில், ஜெமினி கழற்றி வைத்திருக்கும் அவரது சன் கிளாஸ் வழியாக பாரதியைக்காட்டும் அழகு. அந்த போட் சீன் கொடைக்கானலில் எடுக்கப்பட்டதா என்று எங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம்.

பாட்டுக்காகவும் பாரதிக்காகவும் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். பாட்டால்  B- grade.

நாலும் தெரிந்தவன் (Naalum Therindhavan)


1968இல் வந்த படம். ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், மனோகர், எம்.ஆர்.ஆர். வாசு, அஞ்சலி தேவி, பண்டரிபாய், வி.கே. ராமசாமி, நாகேஷ், டைப்பிஸ்ட் கோபு நடிக்க, எஸ்.எம். சுப்பையா நாயுடு (டைட்டில்களில் எஸ்.எம்.எஸ். என்று மட்டும்தான் போட்டிருந்தது.) இசையில், ஜம்பு இயக்கி இருக்கிறார். ஷம்மி கபூர் நடித்த ப்ரொபஸர், சவுண்ட் ஆப் ம்யூசிக் இரண்டையும் கொஞ்ச கொஞ்சம் கலக்கி எடுத்திருக்கிறார்கள். படத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை, அதனால் ஓடி இருக்காது என்று யூகிக்கிறேன். படத்தை பார்த்த பிறகு இது சர்வ நிச்சயமாகிவிட்டது.

சொத்துக்காக வி.கே. ராமசாமி தம்பி மனோதரின் மனைவியான அஞ்சலி தேவி மீது பழி சுமத்தி அவளை வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். அஞ்சலி தேவி கஷ்டப்பட்டு தன் மகன் ரவிச்சந்திரனை வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனாகும் ரவி தாடி ஒட்டிக்கொண்டு தன் அப்பா வீட்டிலேயே காஞ்சனா உட்பட்ட தன் அத்தை மகள்களுக்கு ட்யூஷன் எடுக்கப்போகிறார். காதலை மனோகரும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அஞ்சலி தேவிதான் ரவிச்சந்திரனின் அம்மா என்று தெரிந்ததும் கல்யாணம் நின்றுவிடுகிறது. ரவி தன் தாய் உத்தமிதான் என்று நிரூபிப்பதாக சபதம் போட்டு அதை நிறைவேற்றுகிறார்.

கொடுமை # 1: மனோகரின் வசனம் – “உலக சமாதானத்துக்காகத்தான் நான் பட்டாளத்துலே சேர்ந்தேன்” – உலக சமாதானத்துக்கு பட்டாளமா? இவர் என்ன ஐ.நா. ராணுவத்திலயா சேர்ந்தார்?

கொடுமை # 2: டைபிஸ்ட் கோபு ரோட்டோரத்தில் ரவிச்சந்திரனுடன் பேசும் ஒரு வசனம். “உங்கம்மாவை மோகன் எங்கேயோ கடத்தி வச்சிருக்கான். அவனுக்கு தெரியாம அவனை நீ பின்தொடர்ந்து போனா எங்கேன்னு கண்டுபிடிசசிறலாம். அதோ மோகன்!” அது எப்படிய்யா அவ்வளவு சரியான நேரத்திலே மோகன் அங்கே வர்றான்?

கொடுமை # 3: டைபிஸ்ட் கோபுவின் அட்வைஸ்படி மோகனை ரவி அவனுக்கு தெரியாமல் பின்தொடர்கிறார். அடுத்த காட்சி – ஹோட்டலில் மோகன் உட்பட எல்லாருக்கும் முன்னால் ரவிச்சந்திரன் யாரோ ஒருத்தியுடன் “ஹஹா! நரி ஒன்று சிரிக்கிறது” என்று ஒரு பாட்டு பாடுகிறார்.

கொடுமை # 4: எல்லா வில்லன்களையும் பூ என்று ஊதிவிடும் ரவி. படம் முடிந்துவிட்டது என்று நினைத்தால் அதற்குப் பின் அஞ்சலி தேவியுடன் 10 நிமிஷம் “தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன், அப்பாவை காப்பற்ற மாட்டேன்” என்று வசனம். இந்த காப்பில் எம்.ஆர்.ஆர். வாசு நுழைந்து இன்னொரு 10 நிமிஷம் சண்டை. என்ன கொடுமை சரவணன் இது?

பாதி கிழிந்த போட்டோவை கண்ணாடியில் பிரதிபலித்து பாதி முகத்தை முழுதாக்கும் ட்ரிக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்தது.

“பூவா பூவா சொரியுதுடி”, “செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா”, “நரி ஒன்று சிரிக்கிறது” என்ற பாட்டுகள் இருக்கின்றன. எந்த பாட்டும் உருப்படியாக இல்லை.

10க்கு 2 மார்க். F grade.