எம்.கே. தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள் – சோகமான கதை !


(ஈஸ்வர் கோபால் அனுப்பியுள்ள பதிவு – இது ஒரு மீள் பதிவா என்பது தெளிவாகத்த் தெரியவில்லை. உரிய courtesyக்கள் செலுத்தாததற்கு  சம்பந்த பட்டவர்கள் மன்னிக்கவும். தகவல் தெரிந்தவுடன் இணைக்கிறோம். ஓவர் டு) ஈஸ்வர் கோபால்)

Re: IDHAYA VEENAI by Dr. M.K.R.SANTHARAM

Postby mkrsantharam » Mon Nov 01, 2010 3:47 pm

தொகுப்பு எண் : 56 

Image

” ஹேய்…….

வாழ்விலோர் திரு நாள் ! …… “

பாய்ந்தோடும் வெள்ளைக் குதிரை யில் இரு கால்கள் அசைந்தாடுவது
முதலில் தெரிய , பின்னர் காமிரா மெல்ல மெல்ல மேல் நோக்கி
நகர்ந்து ………..

பாகவதரின் சிரித்த முகத்தை ” போகஸ் “செய்கிறது !

Image

ஆமாம் …..

16 – 10 – 1944 , அன்று தீபாவளி !

” ஹரிதாஸ் “

அன்றைய தினம் ” ரிலீஸ் ” செய்து , படத்தின் ஆரம்பக் காட்சியில்
பாகவதர் மேற்கண்டவாறு பாடிக்கொண்டே வந்ததைப் பார்த்து மக்கள்
கைகளைத் தட்டியும் , ” விசில் ” அடித்தும் மகிழ் வடைந்தனாறாம் !
( அப்போது அடியேன் …… இல்லே ..இல்லே … என் அண்ணன் கூட
பிறக்கவில்லை ! )

அது மட்டுமா !

பாகவதர் இந்த பாடலைப் பாடிக்கொண்டே ……..

கண்ணடிக்கிறார் !

இந்த காட்சியில் பெண்கள் சொக்கிப் போனாராம் !

தமிழ் சினிமா வரலாற்றில் :

” ஹீரோவுக்கான அசத்தலான அறிமுகக் காட்சியை
அறிமுகம் செய்தது இந்த படம்தான் !

” குடும்பப் பெண்கள் ” பாகவதரின் அழகிலும் பாடலிலும் மயங்கி
அவரைக் காண பின் தொடர்ந்து செல்லும் நிலை உருவானதால்
பல குடும்பத்தலைவர்கள் , அந்த பெண்களை தங்கள் தங்கள்
வீட்டுக்கு அழைத்து செல்வதில் மிகுந்த சிரமம் அடைந்தனராம் !

பாகவதருக்கு ” காதல் காய்தம் ”
( நடிகர் நாகேஷ் , தான் நடிக்கும் படங்களில் ” காதல் கடிதம் ” என்று சொல்லும் இடங்களில் இப்படித்தான் சொல்லுவார் ! ) எழுதிய பெண்கள் ஏராளம் !

இந்த விஷயங்களை அடியேன் மிகைப் படுத்தி எழுதவில்லை !
நடந்தது நடந்தபடி எழுதினேன் !

” ஹரிதாஸ் ” படம் வெளி வந்த பிறகு பாகவதரின் புகழ் உச்சியில்
இருந்தது உண்மை !

இன்னொன்று :

ஒரு சினிமா நடிகரைப் பார்ப்பதர்க்கென்று மக்கள் கூட்டம்
கூட்டம் ஆக வருவது , பாகவதருக்கு பின்னர் தான் ஏற்பட்டது !

ஒரு முறை பாகவதர் கொச்சின் போய் விட்டு இரயில் இருந்து
திரும்பும் போது , பாகவதரைப் பார்த்தே ஆகா வேண்டும் என்று
மக்கள் இரயில் நிலையத்திற்கு வந்து அவரை ” தரிசித்து ” விட்டுத்தான்
இரயிலை ஓட்ட விட்டார்கள் ! இதனால் இரயில் ஐந்து அல்லது ஆறு
மணி நேரம் தாமதம் ஆவதுண்டு ! பாகவதர் வருவதை அறிந்த மக்கள்
இரயில் நிலையத்திற்கு வருவர் ! ” பிளாட்பாரம் டிக்கட் ” அனைத்தும்
விற்று விடுமாம் ! இரயில் நிற்கத் தேவை இல்லாத நிலையங்களுக்குக்
கூட இரயில் வண்டி நிறுத்தப்படுமாம் ! மக்கள் பாகவதரை ” வழி
அனுப்பி விட்டால்தான் ” இரயில் கிளம்பு அனுமதி கிடைக்குமாம் !

சுருக்கமாக சொல்லப் போனால் :
மகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் அவரைப்
பார்ப்பதற்கு கூடிய கூட்டம் போல் , பாகவதருக்கு ஏற்பட்டது !

” ஹரிதாஸ் ” படம் ” சூப்பர் ஹிட் ” !

எப்போதும் ஒரு சமயத்தில் ஒரே படத்தில் நடிக்கும் பழக்கம் உள்ள
பாகவதர் , ” ஹரிதாஸ் ” வெற்றிக்கு பிறகு நிறைய படங்களை ஒத்துக்
கொண்டார் ! ” அட்வான்ஸ் ” வாங்கிக் கொண்டார் !

அந்த படங்கள் :

1 ” ராஜ யோகி ” 2 . ” வால்மீகி
3 . ” பில்ஹணன், 4″ ஸ்ரீ முருகன்”
5 . “உதயணன் ” 6 .” பக்த மேதா”
7 .” ஜீவகன்” , 8 .. ” காளிதாஸ்”
9 ” நம்பியாண்டார் நம்பி “

இத்தனைப் படங்களை ஒத்துக்கொண்டு புகளின் உச்சியில் இருந்த

பாகவதருக்கு ……


ரி
வு

ஏற்பட்டது !
எப்படி ?

” ஹரிதாஸ் ” வெளியான அதே தீபாவள் நாள் , தான் தங்கியிருந்த
திருச்சி பங்களாவை விட்டு தன நண்பர்களை சந்திக்க குதிரை
வண்டியில் ( அந்த கால ” பென்ஸ் ” கார் ! ) கிளம்பி வண்டியில்
கிளம்பிப் போன பாகவதருக்கு விபத்து நேர்ந்தது ! சாலையில்
குவித்து வைத்திருந்த கருங்கற் கற்களில் ( அந்த காலத்திலும்
இதே ” கர்மாந்திரம் ! ” ) வண்டி சக்கரம் மாட்டிக்கொண்டு வண்டி
குடை சாய்ந்தது . பாகவதரின் இரு முழங்கால்களில் பலத்த அடி !
” ஹரிதாஸ் ” படத்தில் , இறுதியில் வருவது போல் பாகவதர்
தவழ்து நடக்கிறார் என்று அந்த காலப் பத்திரிகைகள் ” அவல ”
சாப்பிட்டன ! இந்த சம்பவத்தை பாகவதர் ஓர் அபசகுனம்
என்றே நினைத்தார் !

அவர் நினைத்தது உண்மையானது !

” ஹரிதாஸ் ” படம் 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கும்போது , போர் முனைச் செய்திகளைக் கேட்பதற்காக
வானொலியை நாடும் அந்த கால மக்கள், அந்த ” BREAKING NEWS ”
கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர் !

அந்த செய்தி :

” லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடிகர்
எம். கே. தியாகராஜா பாகவதர் கைது செய்யப்பட்டார் ! ”
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மட்டும் அல்ல ,
பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் , மற்றும் பிரபல
படத்தயாரிப்பாளர் ” பட்சி ராஜா ” எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாய்டு –
ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் . தமிழ் நாட்டை கலக்கிய

இந்த கொலை வழக்கு அந்த காலத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டது .

( ” இந்த கொலை வழக்கு பற்றி ஒரு தனித் தொகுப்பு ஆகா
எழுத அடியேனும் விருப்பம் ! எனவே , அந்த கொலை வழக்கு பற்றிய
விவரங்களை இங்கே இப்போது கொடுததால் , அடியேன் எழுத ஆரம்பித்த
தலைப்பில் இருந்து விலகிச் சென்ற மாதிரி ஆகிவிடும் ! “

இந்த வழக்கில் பாகவதர் சிக்கியது அவரது ” இமேஜ் ” ஐ மிகவும் பாதித்தது !
வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பாகவதர் பெரும் பொருட்
செலவு செய்தார் ! ஆனால் எல்லாம் வீண் ஆனது !

பாகவர் உட்பட ஆறு பேருக்கு ” ஆயுட் தண்டனை ” வழங்கப்பட்டது !

பாகவதர் இடிந்து போனார் ! கையில் இருந்த பணமெல்லாம் கோர்ட் ,

கேஸ் என்று என்று கரைய ஆரம்பித்தது .

போட்டிப் போட்டுக்கொண்டு ” அட்வான்ஸ் ” பணம் கொடுத்து படங்களை

” புக் ” செய்த படத் தயாரிப்பாளர்கள் , தங்கள் பணத்தை திருப்பித்
தரும்படி ” டார்ச்சர் ” செய்ய , வீட்டையும் நகைகளையும் விற்று
அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்து விடுமாறு தன வீட்டில்
உள்ளவர்களிடம் சொல்லி விட்டார் , பாகவதர் !

பாகவதர் நடித்துக்கொண்டிருந்த ” உதயணன் வாசவதத்தா ”
படம் அப்படியே நிறுத்தப் பட்டது ! அதற்கு பதில் அந்த படத்தில்

ஜி . என். பாலசுப்பிரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
அது போல் :

” ஸ்ரீ வள்ளி ” படத்திற்கு தி .ஆர்.மகாலிங்கம் அவர்களும் ,

” வால்மீகி ” படத்திற்கு ஹொன்னப்பா பாகவதரும் நடிக்க

ஆரம்பித்தனர் ! பாகவதர் பாடி ஒரு படத்தில் சேர்க்கவேண்டிய பாடல்

ஒன்றை இயக்குனர் கே. சுப்ரமணியம் , பி. யு . சின்னப்பா , டி. ஆர். ராஜகுமாரி

நடித்த ” விகட யோகி ” என்கிற படத்தில் சேர்த்துவிட்டார் !

அந்த படத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா ஏதோ ஒரு ரசாயனக் கலைவையை

தெரியாமல் குடித்து பின்னர் குரல் மாறி ” பாகவதர் குரலில் ” பாடுவதாக கதை !

பாகவதர் ” உள்ளே ” இருப்பதால் வந்த வினை !

ஆனால் ……..

இந்த தடைகளையும் மீறி ” ஹரிதாஸ் ” படம் மூன்று தீபாவளிகளையும்

கடந்து ஓடிக் கொண்டிருந்தது !

Image

இரண்டு வருடங்கள் ! பாகவதரும் என்.எஸ் . கிருஷ்ணன்

ஆகிய இருவரும் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தனர் !

இந்த தண்டனையை எதிர்த்து ” அப்பீல் ” செய்தார் பாகவதர்

அப்போதைக்கு லண்டனில் உள்ள பிரிவியு கவுன்சில் தான் இந்தியாவுக்கு

” சுப்ரீம் கோர்ட் ! ” லட்சுமிகாந்தன் கொலையில் பாகவதரும் , என். எஸ்.

கிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது சரியாக உறுதி செய்யப்படவில்லை

என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது !

1947 , ஏப்ரல் மாதம் , ஒரு நாள் பாகவதரும் , என்.

எஸ் . கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டு

வெளியே வந்தனர் .

கிட்டத்தட்ட முப்பது மாத சிறை வாசத்தின் சோர்வு பாகவதரின் முகத்தில்

தெரிந்தது ! அந்த பொன்னிற தேகத்தில் பொலிவு இல்லை ! அன்றைய

வானொலியில் பாகவதர் விடுதலை ஆனது தான் தலைப்பு செய்தி !

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் தன தம்பியுடன் உடனே

சென்றது வடபழனி முருகன் கோவில் தான் ! பின்னர்

இரயில் ஏறி திருச்சிக்கு போனார் . வாசலில் அவர் குடும்பத்தினர் வெளியே

நின்று அவரை வரவேற்றனர் !

ஆனால் ……………… !

முன்பு போல் பாகவதரைக் காண வரும் ரசிகர்களின் கூட்டம்

இல்லை ! பாகவதரின் கண்களில் கண்ணீர் !

புகழை அடைய மிகவும் எளிது !

ஆனால் அதனைக் கட்டிக் காப்பது மிக அரிது !

இப்போதைய ” எந்திரன் ” ரஜினிக்கும் அந்த கவலை உண்டு !

ரொம்ப நாளைக்குப் பின்னர் குடும்பத்தோடு உணவு உண்டார் பாகவதர் !

மறு நாள் :

பட உலகில் உள்ள பல பட அதிபர்கள் அவரைப் பார்க்க வந்தனர் !

” அட்வான்ஸ் ” தொகையை வறுப்புரித்தி திருப்பி வாங்கிப் போன பட

அதிபர்களும் அதில் அதிகம் பேர் உண்டு ! யாரிடமும் நேரிடையாக

பாகவதர் பேசவில்லை ! அமைதியாக இருந்தார் ! எல்லோரும் அமைதியாக

உட்கார்ந்திருக்க , பத்திரிகையாளர்கள் பலர் அங்கே இருக்க பாகவதரின்

அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்க பாகவதர்

பேச ஆரம்பித்தார் !

” இந்த இரண்டரை வருடங்களில் உலகத்தை புரிந்து கொண்டேன் !

சினிமா உலகத்தையும் தெரிந்து கொண்டேன் ! இனிமேல் நான் சினிமாவில்

நடிப்பதாக இல்லை ! அடிப்படையில் நான் ஒரு சங்கீத வித்துவான் ! எனவே

சங்கீதத்தில் கவனம் செலுத்தப் போகிறேன் ! “

இந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது !

ஆனால் இசை உலகம் பாகவதரை ஏற்றுக்கொள்ளவில்லை !

காரணம் ?

” ஜெயில் – க்கு போய் வந்தவருக்கெல்லாம் எப்படி பாட

அனுமதிக்கலாம் ? ” என்று சபாக்கள் அவரைப் பற்றி இகழ்ந்து பேசின !

பாகவதர் நொந்து போனார் !

ஆனாலும் பாகவதர் மனம் தளராமல் கோவிலுக்கு சென்று ஆண்டவனின்

சன்னதிக்கு சென்று பாட ஆரம்பித்தார் !

விரைவில் பாகவதர் :

1 . ரேடியோ கச்சேரி

2 . கோவில் திரு விழா

3 . கல்யாண கச்சேரி

போன்ற நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார் !

ஓரளவு , அதில் வெற்றியும் பெற்றார் !

” ஆனால் இது மாதிரியான ” குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை ” விட

திரைப் படங்களில் மறுபடியும் நடித்தால் உங்களின் புகழ் மறுபடியும் பெருகும் !

ஒரு ” சுப்பர் ஹிட் ” கொடுத்த பின்னர் பட உலகில் இருந்து விலகி விடலாம் !

பின்னர் இசைத் துறையை நீங்கள் நாடலாம் ! “

என்று அவரின் ” நலம் விரும்பிகள் ” கேட்டுக்கொண்டனர் !

பாகவதர் யோசித்தார் !

அதில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார் !

மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் !

முன்னர் போல் மற்றவர்கள் முன்னாள் கைகளைக் கட்டி வேலை செய்வது

பாகவதருக்குப் பிடிக்கவில்லை !

தாமே சொந்தப் படங்களை எடுப்பது என முடிவு செய்தார் !

இதுதான் அவர் செய்த மாபெரும் தவறு என்று கூட சொல்லலாம் !

” ராஜ முக்தி “

பற்றி Bags
Trying out

One Response to எம்.கே. தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள் – சோகமான கதை !

  1. selva says:

    யானைக்கும் அடிசறுக்கும்

பின்னூட்டமொன்றை இடுக