பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்


இப்போதுதான் படித்தேன், அதற்குள் விமலும் செய்தி அனுப்பி இருக்கிறார்.

முரளியின் நடிப்பைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் அபிப்ராயம் இல்லை. அவரது ஆரம்ப காலத் திரைப்படங்களில் – பூவிலங்கு, புதியவன், பகல் நிலவு மாதிரி படங்களில் – அவரிடம் ஒரு எனர்ஜி தெரிந்தது. கல்லூரி மாணவன் என்ற க்ளிஷேக்குள் புகுந்தவர் வெளியே வர விரும்பவே இல்லை. கடைசி படமான “பாணா”வில் கூட மகன் ஹீரோ, இவர் கல்லூரி மாணவராம்!

அவர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது பொற்காலம். அது சேரனின் படம், முரளியின் படம் இல்லை.

46 எல்லாம் ஒரு வயதே இல்லை. அவர் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

ஓவர் டு விமல்!

நல்ல எளிமையான ஒரு நடிகர்.
அலட்டல் இல்லாத நடிப்பு.

முரளியுன் அன்றும் இன்றும் படங்கள் பாதி அளவு தான் தயார் செய்து வைத்து இருந்தேன். முழுமை செய்து வெளி இடுவதற்குள் இந்த மாதிரி ஒரு செய்தி …….

தமிழ் திரை உலகிற்கு இது ஒரு பெரிய இழப்பு.
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோமாக.
————————————–
ஏராளமான தமிழ்ப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வந்த முரளி(46 வயது), நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.

1984 ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார்.

இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்து வந்தார்.

கடல் பூக்கள், தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வந்த இவரது மகன் அதர்வா நாயகனாக நடித்த பாணா திரைப்படம் தற்போது வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முரளி, ‘’30 வருட திரையுலக வாழ்க்கையில் நான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘பகல் நிலவு’, ‘இதயம்’ படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறது.

‘பூவிலங்கு’ படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. அதர்வா நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்துவிடுவான் என நம்புகிறேன்’’என்று கூறியிருந்தார்.

பணம் முக்கியமல்ல; நல்ல படம்தான் முக்கியம் என்று அதர்வாவுக்கு அறிவுரை கூறி தனது மகனின் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் திடீர் நெஞ்சுவலியால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.

அவரது நினைவில் மூன்று பாட்டுகள் கீழே:

பூவிலங்கு படத்திலிருந்து ஆத்தாடி பாவாட காத்தாட


இதயம் திரைப்படத்திலிருந்து பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா


வெற்றிக்கொடி கட்டு படத்திலிருந்து கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
முரளி – அஞ்சலி
முரளி பட லிஸ்ட்
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி