மறக்க முடியுமா (Marakka Mudiyuma)


1966இல் வந்த படம். எஸ்.எஸ்.ஆர்., தேவிகா, காஞ்சனா, முத்துராமன், சோ, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், மேஜர், சாரங்கபாணி, எஸ்.என். லக்ஷ்மி, ஏ. கருணாநிதி நடிப்பு. கலைஞரின் கதை. டி.கே. ராமமூர்த்தி இசை. முரசொலி மாறன் தயாரித்து இயக்கி இருக்கிறார்.

தமிழ் நாட்டில் நல்லதங்காள் பாரம்பரியம் என்று ஒன்று உண்டு. சோகத்தை பிழிந்து எடுத்துவிடுவார்கள். இதுவும் அதே மாடல்தான். கடைசியில் சோ தேவிகாவை பார்த்து ஒரு வசனம் பேசுகிறார் – “வாழ்க்கையிலே வர வேண்டிய ட்ராஜெடி எல்லாம் உங்களுக்கு வந்துவிட்டதே” என்று. படத்துக்கு ஒன் லைனர் என்ன என்று கலைஞரும் மாறனும் டிஸ்கஸ் செய்து இருந்தால் இதுதான் என்று முடிவு செய்திருப்பார்கள்.

சிறு வயதில் தேவிகாவின் தாய் அவுட். அப்பா குருடாகி வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தம்பிகளும் பிரிந்துவிடுகிறார்கள். எஜமான் மேஜரின் மகனான முத்துராமனை லவ் செய்வது தெரிந்து மேஜர் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். ஆனால் முத்துராமன் வீட்டை விட்டு ஓடி வந்து தேவிகாவை கல்யாணம் செய்து கொள்கிறார். என்னடா ரொம்ப நேரமாக சோகம் எதுவும் இல்லையே என்று இயக்குனர் உடனே முத்துராமனை தீர்த்துவிடுகிறார். நடுவில் ஒரு தம்பியான எஸ்.எஸ்.ஆர். மீது திருட்டு பட்டம். ஜெயிலில் இருந்து வரும் ஏழையான எஸ்.எஸ்.ஆர் இன்னொரு ஏழையான தன் தம்பி சோவுடன் சேர்ந்து ரேசுக்கு போகிறார், தண்ணி அடிக்கிறார், பிறகு எல்லாவற்றிலும் பெரிய பாவமான மேலை நாட்டு நடனம் ஆடுகிறார். இந்த மாதிரி “கலாசார சீரழிவு” எல்லாம் அந்த காலத்தில் ஃப்ரீ போலிருக்கிறது. கலைஞர் இப்போது டாஸ்மாக்காவது ஃப்ரீ ஆக்கி அந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டுவரலாம்.

தேவிகாவும் சோவும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். குழந்தைக்கு மருந்து வாங்க சோ தன் அப்பாவிடம் – அவர் இப்போது ஒரு குருட்டு பிச்சைக்காரன் – பணம் திருடப் போய் போலீசில் சிக்கிக் கொள்கிறார். ஆனால் அப்பாவும் சோவும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தேவிகா தன் மானத்தை மிகுந்த தயக்கத்துடன் விற்கத் தயாராகிவிட்டார். அந்த மானத்தை வாங்க “காகித ஓடம் கடலலை மீது” என்று குடும்பப் பாட்டை பாடிக்கொண்டே போதையில் எஸ்.எஸ்.ஆர். வருகிறார். பாட்டை அக்கா தொடர, எஸ்.எஸ்.ஆருக்கு உலகமே சுழல, அக்கா மிச்ச பாட்டை பாடி முடித்துவிட்டு தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ள, எல்லாரும் கொஞ்சம் வசனம் பேசி விட்டு திருந்தி எஸ்.எஸ்.ஆரும் காஞ்சனாவும் கல்யாணம் செய்துகொண்டு, எஸ்.எஸ்.ஆர். என் அக்காவை மறக்க முடியுமா என்று சொல்லி சுபம்! (ஹீரோயின் செத்தாலும் எனக்கு சுபம்தான்!)

எஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி powerful காட்சி. இப்போதும் ரத்தம் உறைகிறது. நாற்பது வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து என் மாமியார் இது மோசமான படம், பார்க்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இந்த காட்சியில் ஏற்பட்ட aversionதானோ என்னவோ?

இந்த படத்தை பார்த்துதான் யாதோன் கி பாராத் படம் எடுத்தார்களா என்ன? சிறு வயதில் பிரியும் சகோதர சகோதரிகள், குடும்பப் பாட்டு, ரயில் வண்டியில் பிரியும் குழந்தைகள், அக்கா தம்பிகள் சந்திக்கும்போது காகித ஓடம் பாட்டு பின்னணி இசையில் என்று பல முறை பார்த்திருக்கும் தீம்கள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியதா?

ஹிந்துக் கடவுள்கள் ரோல் செய்ய மாட்டேன் என்று சொல்லி இலட்சிய நடிகர் என்று பட்டம் வாங்கிய எஸ்.எஸ்.ஆர்., இதில் கிருஷ்ணன் ரோல் போடும் நடிகராக வருகிறார். 🙂

ஆச்சரியப்படும் விதமாக தேவிகா underplay செய்கிறார்.

ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. எனக்கு கதை, பாட்டு இவற்றை மட்டும்தான் ரசிக்கத் தெரியும். நானே ஒளிப்பதிவை கவனித்தேன் என்றால் நன்றாக இருந்திருக்கவேண்டும்.

மருந்துக்கு கூட ஒரு நகைச்சுவை காட்சி இல்லை. மாறன் தைரியசாலிதான். தப்பாக எழுதிவிட்டேன். எஸ்.எஸ்.ஆர் சமைக்கும் காட்சிகள் நகைச்சுவை காட்சிகள்தான், சிரிப்புதான் வரவில்லை. இது சோகப் படம் என்பதாலோ என்னவோ இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என்று நமக்கு சோகம் ஏற்படுகிறது.

காகித ஓடம்” பாட்டு வரப்போகும் சோகத்தை அருமையாக கோடி காட்டுகிறது. சுசீலாவின் குரல் ஜாலம் செய்கிறது. இதை போன்ற எனக்கு “தேவன் கோவில் மணியோசை” பாட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு கதை உண்டு. பாட்டு எழுத வந்திருந்த மாயவநாதன் ட்யூனை கொடுங்க கொடுங்க என்று ராமமூர்த்தியை பிய்த்து எடுத்தாராம். கோபம் வந்த ராமமூர்த்தி “மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் – இதுதான்யா ட்யூன்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். இதைக் கேட்ட கலைஞர் “காகித ஓடம் கடலலை மீது” என்று எழுதினாராம். டிஎம் எஸ், சுசீலா இருவரும் பாடும் ஒரு வெர்ஷனும் உண்டு.

“வானும் நிலமும் வீடு” என்ற ஏ.எல். ராகவன் பாட்டு நான் முன்னால் கேட்டதில்லை. அருமையான எழுத்து.
“வானும் நிலமும் வீடு
காற்றும் மழையும் உணவு
காலும் கையும் ஆடை
ஏழை வாழ்வு சிம்பிள்”
எளிமையான அருமையான வார்த்தைகள். பாட்டு பிரமாதம். சோவுக்கு ஆடத் தெரியாவிட்டாலும் படமாக்கப்பட்டிர்ந்த விதமும் பிரமாதம். எழுதியவர் மாயவநாதன்.

“எட்டி எட்டி ஓடும் போது கொதிக்குது நெஞ்சம்” திருச்சி தியாகராஜன் எழுதி டிஎம் எஸ் பாடியது.
“ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்” கலைஞர் எழுதி டிஎம் எஸ், சுசீலா பாடியது.
“வசந்த காலம் வருமோ” என்ற சுரதா எழுதிய பாட்டும் இதில்தானாம். ஆனால் கட் செய்துவிட்டார்கள். அது நல்ல பாட்டு.

ஜோடி பிரிந்ததற்கு பின் ராமமூர்த்தி இசை அமைத்த படங்கள் மிக குறைவு (நான், மறக்க முடியுமா, சாது மிரண்டால்). நான் ஹிட். இதுவும் ஹிட். பிறகு அவருக்கு ஏன் மேலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை?

எதிர்பாராமல் வந்த “வானும் நிலமும் வீடு” பாட்டு, “காகித ஓடம்” பாட்டு, எஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி ஆகியவற்றுக்காக பார்க்கலாம். டிவியில் மெகா சீரியல்கள் பார்ப்பவர்கள் தைரியமாக பார்க்கலாம், பைசா வசூல் ஆகிவிடும். 10க்கு 6 மார்க். C grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to மறக்க முடியுமா (Marakka Mudiyuma)

  1. Shakthiprabha says:

    Too pessimistic. I love the movie for its songs.

    Thanks for the update on ramananthan’s tune and the story behind it. Interesting!

  2. RV says:

    Shakthiprabha,

    Yes, this is too pessimistic. A modern version of Nallathangal. The intention is to shock with the incest angle and make the audience cry. I think this is partly inspired by an older movie called Mangaiyarkkarasi that also had a scene where the son unknowingly “visiits” his mother. One of my friends used to say that in every Kalaignar story there would be an “unnatural” relationship. At least, pre-marital sex. :-))

    Plum, Devika too looks oldish…

  3. vetti paya pulla says:

    Bagdadh thirudan review
    ———————–

    Released in 1930s.
    Before that we were used to oomail padam.

    When me and my wife went for honey moon to kovilpatti in katta vandi, we saw it on the way
    in bioscope.
    This is the movie, MGR started wearing “Pal settu”.
    First movie, for Pandari bhai to set fashion trend by wearing jacket.
    Now we are too old to remember our age.
    Now both our speakers are out.
    The movie is again oomai padam for us.
    We both looked at each other and cried watching
    this oomai padam remembering those honey moon days.

    If Kizhangal start using web , result is bolgs like this.
    Thaanga mudiyalada sami.

  4. RV says:

    vetti paya pulla,

    I object! I am only araik kizham! You are implying that I am full kizham!

  5. பிங்குபாக்: கலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே | சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக