இளமை ஊஞ்சலாடுகிறது


இளமை ஊஞ்சலாடுகிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஸ்ரீதர் டைரக்ஷனில் ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து நடித்த “இளமை ஊஞ்சலாடுகிறது” வெள்ளி விழா படமாக அமைந்தது. ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் நடித்து வந்த ரஜினிகாந்தையும், நடிப்பில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருந்த கமலஹாசனையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க ஸ்ரீதர் முடிவு செய்தார். அவர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பு தர விரும்பி, அதற்கேற்றபடி கதையை அமைத்தார். அதுதான் “இளமை ஊஞ்சலாடுகிறது.”

விறுவிறுப்பான கதை
எதிர்பாராத திருப்பங்களும், உணர்ச்சிமயமான சம்பவங்களும் நிறைந்த கதை. ரஜினிகாந்த் பெரிய தொழில் அதிபர். அனாதையான கமலஹாசனை தன் உடன்பிறவா சகோதரனாக கருதுகிறார். தன் தொழிற்சாலையின் ஜெனரல் மானேஜராக நியமிக்கிறார்.
ஆபீசுக்குள்தான் அவர்களுக்குள் முதலாளி -மானேஜர் உறவு. வெளியே, “போடா, வாடா” என்று பேசிக்கொள்ளும் அளவுக்குநட்பு.
கமலஹாசனின் காதலி ஸ்ரீபிரியா. இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள்.
ஸ்ரீபிரியாவின் தோழி ஜெயசித்ரா விதவை. அவர் கமலஹாசன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். மனதுக்குள் கமலை எண்ணி ஏங்குகிறார். ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ராவும் கிராமத்துக்கு செல்கிறார்கள். ஒரு நாள் திருவிழா பார்க்க அடுத்த கிராமத்துக்கு ஸ்ரீபிரியா செல்கிறார். வீட்டில் ஜெயசித்ரா மட்டும் தனியாக இருக்கிறார்.
ஸ்ரீபிரியாவை பார்க்க வரும் கமல், அன்றிரவு ஜெயசித்ராவுடன் தங்க நேரிடுகிறது. தனிமை இருவரையும் சலனப்படுத்துகிறது. ஜெயசித்ராவின் இளமை, கமலின் மனதை ஊஞ்சலாடச் செய்கிறது. இருவரும் தங்களை மறந்து ஐக்கியமாகிறார்கள்.
பொழுது விடியும் வேளையில், கமலஹாசனை மனச்சாட்சி உறுத்துகிறது. “என்னை மன்னித்து விடு” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறார். வெளிïர் சென்றிருந்த ஸ்ரீபிரியா, திரும்பி வருகிறார். ஜெயசித்ரா தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர் அருகே ஒரு கடிதம் இருப்பதையும் பார்க்கிறார்.
கடிதத்தைப் படிக்கும் அவர் மனம் எரிமலையாகிறது. கமல் தனக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணிக் குமுறுகிறார். ரஜினியை மணக்க சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது.
இந்த சமயத்தில், ஜெயசித்ராவிடம் இருந்து ஸ்ரீபிரியாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. தான் கர்ப்பமாக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கமலை ஸ்ரீபிரியா சந்தித்து, ஜெயசித்ராவை மணந்து கொண்டு அவருக்கு வாழ்வு அளிக்கும்படியும், செய்த பாவத்துக்கு அதுதான் பிராயச்சித்தம் என்றும் கூறுகிறார்.
அதன்படி கமல் பெங்களூருக்கு சென்று, ஒரு விபத்தில் சிக்கி மரணப்படுக்கையில் இருக்கும் ஜெயசித்ராவை சந்திக்கிறார். தாலி கட்டி மனைவியாக ஏற்கிறார். சுமங்கலியாகி விட்ட மகிழ்ச்சியுடன், ஜெயசித்ரா உயிர் துறக்கிறார்.
எதிர்பாராத `கிளைமாக்ஸ்’
இதன் பிறகு கமலும், ஸ்ரீபிரியாவும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரஜினி அங்கு வருகிறார். கமல் மீது சந்தேகப்பட்டு, ஆவேசத்துடன் தாக்குகிறார். நடந்த உண்மைகளை ஸ்ரீபிரியா வெளிப்படுத்துகிறார். கமலும், ஸ்ரீபிரியாவும் முன்னாள் காதலர்கள் என்பதை அறியும் ரஜினி, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறார்.
வெள்ளி விழா
9-6-1978-ல் வெளியான இந்தப்படம், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
இளையராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாம் `ஹிட்’ ஆயின.
கமல், ரஜினி இருவரும் பொருத்தமான வேடங்களில், போட்டி போட்டு நடித்தனர்.
ஸ்ரீதர் தன் முத்திரையை முழுமையாகப் பதித்திருந்தார்.
ரஜினியும், கமலும் இணைந்து நடித்த படங்களில் மறக்க முடியாத படம் “இளமை ஊஞ்சலாடுகிறது.”

விகடன் விமர்சனம் – நன்றி விகடன் பொக்கிஷம் 25-06-1978
உணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, காதல், ஊடல், சபலம், சந்தேகம் இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் ஸ்ரீதர். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.
கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் உடன் பிறப்புகள் மாதிரி இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் – டெட் ஹீட்!
கமலஹாசன், ஸ்ரீப்ரியா இருவரும் ஓட்டலில் சாப்பிடும்போது, பர்ஸ் தொலைந்துவிட்டதாக எண்ணி, அதன் விளைவுகளைக் கமலஹாசன் கற்பனை பண்ணிப் பார்ப்பது நல்ல தமாஷ்! ஸ்ரீதர்-நிவாஸ் காம் பினேஷன் படத்துக்கு இளமையையும் கிளுகிளுப்பையும் தரும் ஒரு நல்ல சேர்க்கை. ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ ஸ்ரீதரை இன்றைய இளம் தலைமுறையினர் அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
பத்மா சினிமாவுக் குக் கிளம்பும்போது ஜெயந்தி, ”எந்த டேமே ஜும் இல்லாம உருப்ப டியா வந்து சேரு” என்பது ரசிக்கத்தக்க கிண்டல்!டெக்னிகல் குறை கள் அதிகம் இல்லாமல் சிறந்த முறையில் தயாரிக் கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஓரிரு இடங் களில் மேலும் சற்று அக்கறை காட்டியிருக்க லாம். உதாரணமாக, ஸ்ரீப்ரியா பாடும் ‘நீ கேட்டால்’ பாடல் ஆரம் பத்தில் ரிஃப்ளெக்டர் அடிக்கடி ஆடுவதால் ஒளியசைவு ஏற்படுகிறது. அதே போல, டீ எஸ்டேட் டில் கமலஹாசன் நடந்து வரும்போது அவரை ஃபாலோ செய்யும் ரிஃப்ளெக்டர் காமிராவுக்கு அருகில் முன்னே இருக்கும் மின்சார போஸ்டின் மீது விழுந்து கண்ணை உறுத்துகிறது. Back Projection விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.முரளி – ஜெயந்தி காரில் போகும் ஸீனில் ஒரே ஷாட் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. இந்தப் படம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருப் பதாலேயே, இவையும் தவிர்க்கப்பட் டிருக்கலாம் என்பது எங்கள் எண்ணம்.சமீப காலத்தில் வெளிவந்த எல்லா வண்ணப் படங்களையும்விட வண்ணக் கலவை பளிச்சென்று அழகாக இருக்கும் இந்தப் படத்தில், அந்த நீச்சல் குள ஸீனில் லாபரேட்டரி இன்னும் சற்று அக்கறை காட்டியிருக்க வேண்டும். நீலம் அதிகமாக இருக்கிறதே, ஏன்?
”உங்களுக்கு லிவர் பாதிக்கப்பட் டிருக்கிறது. ஓய்வெடுக்க வேண்டும். தாம்பத்ய உறவு கூடாது” என்று டாக்டர் கூறுவது நகைப்புக்கு இடம் தருகிறது. இதற்குப் பதிலாக, முரளியே தன் உடல்நலம் பூரணமாகக் குணமாகும் வரை, தான் காதலிக்கும் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால், கேரக்டரையே உயர்த்தியிருக்குமே!

‘வார்த்தை தவறிவிட்டாய்’ பாட்டு மனத்திலே நிற்கிறதென்றால், அதற்கு இளையராஜாவின் இசையமைப்பும், நிவாஸின் அற்புதமான படப்பிடிப்பும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிமையான குரலும் டைரக்டருக்குப் பூரண ஒத்துழைப்பு தந்திருக்கின்றன. நெஞ்சை விட்டு அகலாத காட்சி.

உமர்கய்யாம் நாட்டி யம் நன்றாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையைப் பொறுத்த வரையில் அங்கு சற்று தொய்வு ஏற்படத்தான் செய் கிறது.

ஜெயந்தியும் முரளி யும் காரில் வரும்போது உணர்ச்சி வசப்படுவதும், பிறகு இருவருமே அது ‘தவறு’ என்பதை உணர்வ தும் தரமான கட்டம்.

ஸ்ரீதரின் கற்பனையில் 59-ல், ‘அம்மா போயிட்டு வரேன்!’ என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை ‘இச்’சோ? இளமை ஊஞ்சல் ஆடத்தான் செய்கிறது.

– விகடன் விமர்சனக் குழு

ஒரே நாள் உனை நான்…..

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…..

கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில்…..

வார்த்தை தவறி விட்டாய்…….


பின்னூட்டமொன்றை இடுக